எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் ஜூன்.29- சேலத்தில் பெண் ஒருவரின் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்த தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கை நேற்று சேலம் மாவட்ட நிலமோசடி பிரிவு போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி பத்மாவதி(59). இவர் தனக்கு வீராணம் பிரிவு ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான 4365 சதுரடி நிலத்தை அபகரித்து அதில் 2592 சதுரடி நிலத்தில் கட்டிடம் கட்டியுள்ளதாக அப்பகுதியின் தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ)ராமசாமி என்பவர் அபகரித்துக் கொண்டார் என்றும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட அவர் இது குறித்து விசாரணை நடத்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசின் நில மோசடி பிரிவிற்கு உத்தரவிட்டார். இந்த வழக்கை டி.எஸ்.பி.ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆட்டோ மாணிக்கம் பத்மாவதியின் நிலத்தை அபகரித்து கட்டிடம் கட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி குறித்த விபரம் வருமாறு.சேலம் வீராணம் பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவர் தனக்கு சொந்தமான 9 ஆயிரம் சதுரடி நிலத்தை தனது மகள்கள் சுசீலா தேவிக்கு 4500 சதுர அடியும், மற்றொரு மகள் சந்திரவதனா என்பவருக்கு 4365 சதுர அடியையும் எழுதி வைத்தார்.
இதில் சந்திரவதனா தனக்கு சொந்தமான நிலத்தை அம்மாபேட்டை சிங்கமெத்தையைச் சேர்ந்த பத்மாவதிக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த நிலையில் இந்த நிலத்தை கடந்த 30.9.96 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேரந்த நாராயணராவ், கிருஷ்ண மூர்த்தி, மோகன் மற்றும் குப்புதாயம்மாள் என்பவர்களுக்கு சொந்தமான நிலம் என்று இவர்கள் பெயரில் போலி ஆவணம் செய்தனர். அந்த நிலத்தை தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ) ராமசாமி கை ஆளாக கருதப்படும் ராஜா என்பவருக்கு பவர் மூலம் கிரயம் செய்யப்பட்டு பின்னர் ராஜாவிடம் இருந்து அந்த நிலத்தை தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம்(எ)ராமசாமி வாங்கியதாக பத்திரவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் அவர் 2592 சதுரடி நிலத்தில் கட்டிடமும் கட்டியுள்ளார்.
நிலம் அபகரிக்கப்பட்டது என்பது தெரியவந்ததும் பத்மாவதி சேலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சேலம் அடிஷனல் சப்- கோர்ட் மேஜிஸ்திரேட் தண்டபாணி என்பவர் 15.3.01 அன்று நிலம் பத்மாவதிக்கு சொந்தம் என தீர்ப்பு கூறினார். இதையடுத்து அவர் நிலத்தை சொந்தம் கொண்டாட முயன்ற போது மாணிக்கம் தர மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் ஆர்.டி.ஓ.விடம் இது குறித்து முறையிட்டார். கடந்த 18.10.2007 ல் இது குறித்து விசாரணை நடத்திய அப்போதைய ஆர்.டி.ஓ.காஜா மைதீனும் நிலம் பத்மாவதிக்கு சொந்தம் என கூறிவிட்டார். அப்போதும் அவர் நிலத்தை திருப்பி ஒப்படைக்கவில்லை.
தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா நில மோசடி குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அமைத்திருப்பதை அறிந்த கொண்ட பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆட்டோ மாணிக்கத்தை கைது செய்து 406(நம்பிக்கை மோசடி செய்தல்), 420(ஏமாற்றுதல்),465(பொய் ஆவணம் தயார் செய்தல்), 471(பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணம் என்றும் தெரிந்து அதை உண்மையான ஆவணம் என பயன்படுத்துதல்),448(வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்) 506(மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தி.மு.க.கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் அபகரித்த நிலத்திற்கு இன்றைய தேதி வரை பத்மாவதிதான் வீட்டு வரி கட்டி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.
இதே போல் அருகில் உள்ள நிலத்தை வைத்திருக்கும் கே.ஆர்.சுசீலாவின் நிலத்திலும் சுமார் 216 சதுர அடி ஆட்டோ மாணிக்கம் அபகரித்து உள்ளதாக அவரும் புகார் செய்துள்ளார்.
ஆட்டோ மாணிக்கம் கைது செய்யப்பட்டதை அறிந்த ஏராளமான தி.மு.க.வினர் சேலம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீஸ் அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட தி.மு.க.வினர் கலக்கம்
கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பு மற்றும் ஆட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்த தி.மு.க.வினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பகிரங்கமாகவே நில அபகரிப்பு,மோசடி போன்ற காரியங்களை துணிந்து செய்தனர். அதிகாரிகளும் அதை வேடிக்கை பார்த்தனர். தற்போது தமிழக முதல்வராக வந்துள்ள ஜெயலலிதா யாருக்கும் பயப்படாமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டு கொடுக்கப்படும் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கைது நடவடிக்கைகளை தொடருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரின் உறவினர்கள் உள்பட தி.மு.க.வினர் பலர் நில மோசடி மற்றும் அபகரிப்பு செய்துள்தாக கூறப்படுகிறது. தி.மு.க.வின் கவுன்சிலர் ஆட்டோ மாணிக்கம் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்த தி.மு.க.வினர் பலரும் கலக்கத்தில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தள அரசு காலாவதியாகும் : பெர்காம்பூர் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
06 May 2024புவனேஷ்வர் : ஜூன் 4-ம் தேதி பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாக போகிறது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.