தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.19 - இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், சிட்கோ நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சி.சண்முகவேலு பதில் அளித்து பேசியதாவது:-
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, இத்துறையில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஜூலை மாதம் 2011 முடிய, இத்துறையில் 347 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் எய்திய விற்பனையைவிட, நடப்பாண்டில் மொத்தம் 700 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதனை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரம் அளிக்கும் முக்கிய தொழிலாக, தேயிலை தொழில் விளங்குகிறது. மொத்தம் உள்ள 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 15 தேயிலை தொழிற் கூட்டுறவு தொழிற்சாலைகளில், உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.
எப்பொழுதெல்லாம் சந்தையில் தேயிலைத்தூளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, சிறு தேயிலை விவசாயிகள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு, சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தேயிலை சிறு விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு, பசுந்தேயிலைக்கான நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பசுந்தேயிலைக்கு 2.8.11 அன்று கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஆணையிட்டு, இதற்காக 11.20 கோடி ரூபாய் ஒப்பளித்துள்ளார்கள்.
சேகோசர்வ் எனப்படும் சங்கம் 364 உறுப்பினர்களை கொண்டு, சேலத்தில் இயங்கி வருகிறது. ஜூலை மாதம் 2011 முடிய இச்சங்கமானது 109.66 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்து, 110.47 இலட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளது.
தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வசதி வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்ட தாய்கோ வங்கியானது, தற்பொழுது 44 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் பொது மக்களிடமிருந்து ரூ.688.72 கோடி அளவிற்கு வைப்புத் தொகை திரட்டிட ரூ.499.51 கோடி அளவுக்கு பல்வகை கடன்கள் வழங்கியுள்ளது. இவ்வாண்டில் இவ்வங்கி ரூ.248.80 இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் மூலமாக குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் தொழில் துவங்குவதற்கு, அதிக கடன் வசதிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா துறை ஆய்வில் அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது தென்னை நார் நேரடியாக நமது மாநிலத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மூலப்பொருளை நமது மாநிலத்திலேயே பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உண்டான திட்டங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட சிட்கோ நிறுவனம் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு, தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே உள்ள 92 தொழிற்பேட்டைகளை தவிர, மேலும் 8 புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ நிறுவனமானது தஞ்சாவூரில் பாலயப்பட்டியிலும், வேலூரில் வாணியம்பாடியிலும், விருதுநகரில் மாநகர் புறத்திலும், புதுக்கோட்டையில் மாத்தூரிலும், திருப்பூரில் இராசாத்தவலசுவிலும், விழுப்புரத்தில் வெண்மணி ஆத்தூரிலும், தூத்துக்குடியில் பிடாநேரியிலும், தேனியில் மரிக்குண்டு கிராமத்திலும் புதிய தொழிற்பேட்டைகளை இந்த நிதியாண்டிற்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி சிட்கோவை புனரமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, இக்குழுக்களின் பரிந்துரைகளின்படி எளிமையான முறையில் தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனமாக சிட்கோவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிட்கோ தலைமை அலுவலக கட்டிடம் கிண்டி தொழிற்பேட்டையில் புதியதாக கட்ட கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நில ஒதுக்கீட்டிற்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டான்சி நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு துறைகளான பள்ளிக்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தேவைப்படும் தளவாட பொருட்களை இந்நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், இந்நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் சி.சண்முகவேலு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் : பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை
24 May 2022மும்பை : விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள்.
-
ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
24 May 2022மும்பை : சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: பல இளம் வீரர்களுக்கு வாய்பளிக்க தவானை தேர்வு செய்யாத டிராவிட்
24 May 2022மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தவான் தேர்வு செய்யப்படாதது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு என தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
24 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அடுத்த ஐ.பி.எல்-லில் இருப்பேன்: ஆர்சிபி ஜாம்பவான் டிவில்லியர்ஸ்
24 May 2022தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
-
பகை உணர்வு எதுவும் இல்லை ; மேரிகோமை மன்னித்துவிட்டேன் : தங்கம் வென்ற நிகத் ஐரீன் பேட்டி
24 May 2022மும்பை : மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022 -
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
சென்னையில் வரும் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தே.மு.தி.க. அறிவிப்பு
25 May 2022சென்னை : சென்னையில் வரும் 3-ம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
25 May 2022லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என பைடன் ஆதங்கம்
25 May 2022டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
-
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
25 May 2022சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
மேட்டூர் அணை நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு
25 May 2022சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
-
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
25 May 2022சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
-
கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் : குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை விளக்கம்
25 May 2022சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
-
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.
-
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
25 May 2022சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.