முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேயின் உடல்நிலை - கவலை மேலும் அதிகரிப்பு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.25 - இன்று 10-வது நாளாகா உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயின் உடல்நிலை குறித்து கவலை அதிகரிக்கும்படி உள்ளது. டிரிப் ஏற்றுக்கொள்ள நேற்றும் அவர் மறுத்துவிட்டதையொட்டி இந்த கவலை அதிகரித்துள்ளது. 

உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை டாக்டர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல் எடையில் நேற்று மேலும் 200 கிராம் குறைந்துள்ளது. அவர் உண்ணாவிரதம் இருக்கும்போது அவரது எடை 72 கிலோவாகும். நேற்று அவரது எடை 66.2 கிலோவாக குறைந்துவிட்டது. இதனால் ஹசாரேயின் ஆரோக்கியம் குறைந்து வருகிறது. அதனால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். பாரதிய ஜனதா பாராளுமன்ற கட்சியும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி ஹசாரேவை கேட்டுக்கொண்டுள்ளது. ஹசாரேயின் ரத்த அழுத்தம் 104-86 என்ற விகிதத்தில் உள்ளது ரத்த சர்க்கரை அளவு நேற்று 82 ஆக இருந்தது. டாக்டர்கள் குழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஹசாரேயின் ஆரோக்கியம் குறித்து விழிப்புடன் இருக்கிறோம் என்று டாக்டர் நரேஷ் டிரெஹன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார். நரேஷ் தலைமையில் டாக்டர்கள் குழுவானது அன்னா ஹசாரேவை கண்காணித்து வருகிறது. எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் டிரிப் ஏற்றுக்கொள்ளும்படியும் ஹசாரேவை கேட்டுக்கொண்டோம். ஆனால் டிரிப் ஏற்றிக்கொள்ள நேற்றும் ஹசாரே மறுத்துவிட்டார் என்று நரேஷ் மேலும் கூறினார். டிரிப் ஏற்றிக்கொள்ள எனது மனசாட்சி மறுக்கிறது என்று ஹசாரே கூறியதாக டாக்டர் நரேஷ் தெரிவித்தார். ஹசாரேயின் உடல்நிலை அபாய கட்டத்திற்கு சென்றுவிடாமல் இருக்க அவரை மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. ஹசாரேயின் முக்கிய உறுப்புகளில் மாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்