எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச் - 6 - தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணாலாகி இருக்கிறது. உறுதியாக இருக்கிறது, சிறப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த கட்டுக்கதை வெட்டவெளிச்சமாகி முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
அடுக்கடுக்கான ஊழல் புகாரால் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் தி.மு.க.விற்கு மேலும் ஒரு பேரிடியாக மத்திய அரசு ஆதரவின்றி தனித்து தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டு காலம் மைனாரிட்டி ஆட்சியாக இடதுசாரிகள், பா.ம.க. தயவு, பின்பு காங்கிரஸ் தயவுடன் காலத்தை தி.மு.க. தள்ளியபோது ``ஆட்சியில் பங்கு'' என்ற கோரிக்கையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் ஜால்ரா எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் காட்டியது மூலம் சமாளித்துவந்த கருணாநிதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பியபோது விவகாரம் பூதாகரமாக எழும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரத்தின் சூத்திரதாரியே ராகுல்காந்தி என்பதுதான் உண்மை. தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும், காங்கிரஸ் தன்னிச்சையான முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி வற்புறுத்தி வந்த நிலையில் ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியபோது ராசாவின் அமைச்சரவை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது மூலம் தி.மு.க.விற்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. பின்பு மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை மீடியாக்கள் கையில் வந்ததற்கும் காங்கிரசின் `கை' பின்னால் இருந்தது.
தொடர்ந்து தி.மு.க.- காங்கிரஸ் உள்குத்து, முட்டல், மோதல் பல்வேறு சம்பவங்களில் வெளி வந்தது. ராசாவை கைது செய்யக் கூடாது என்பதற்காக சோனியாவை சந்திக்க சென்ற கருணாநிதியை, மகன் ராகுல் வரும் வரை காக்க வைத்து பின்பு தொகுதி பற்றி ராகுலின் எண்ணப்படி 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர், கண்ட்ரோல் கமிட்டி என அதிர வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ராசாவின் கைதும் நடந்தது. அதன் பிறகு தொகுதி பங்கீட்டுக்காக காங்கிரஸ் ஐவர் குழுவை போட்டது. இதில் சிதம்பரத்திற்கு கொம்பு சீவி அனுப்பி வைத்தனர். முதல் கட்டத்தை சாதாரணமாக கடந்த தேர்தல் அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்த தி.மு.க. குழுவினரிடம், எடுத்தவுடனேயே 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, கண்ட்ரோல் கமிட்டி என்று சிதம்பரம் பேசியவுடன் ஆடிப்போன தி.மு.க. குழுவினர் தலைவரிடம் பேசி விட்டு கூறுகிறோம் என்று முடித்துக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் வெளியானபோது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சப்பை கட்டு கட்டினாலும் உள்ளே குத்து வெட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. மறுபுறம் தி.மு.க. தரப்பில் உளவுத்துறை மூலம் விஜயகாந்த் தனித்து நிற்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் நேற்று முன்தினம் விஜயகாந்த் போயஸ் தோட்டம் வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து 41 தொகுதிகள் உடன்பாட்டில் கையெழுத்து போட்டார்.
ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் தரப்பில் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித முன்னற்றமும் இல்லாத நிலையில் இறுதியாக காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க குலாம் நபி ஆசாத்தை, சோனியா சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் கருணாநிதி தனது குடும்ப ரத, கஜ, துராதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுதும் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் பணிந்து வந்து விடும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகி விட்டது. அதனால் காங்கிரஸ் தன்னை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற தைரியத்தில் 57 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது மற்றும் வேறு கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று கருணாநிதி கூறி அனுப்பினார்.
ஆனால் காங்கிரசின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளதாம். ஊழலில் நாறிக் கிடக்கும் தி.மு.க. படுதோல்வியை சந்திப்பது திண்ணம். இந்த நேரத்தில் தி.மு.க.வை நெருக்கி சில முடிவெடுக்க வைக்க வேண்டும், அல்லது காங்கிரஸ் தனித்து நின்று பீகார் பாணியில் சோதனை செய்ய கூட தயார் என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
மறுபுறம் தி.மு.க. கலைஞர் டி.வி. விவகாரத்தில் பாகஸ்தர் என்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்த 220 கோடி ரூபாய் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் பிடி கனிமொழியை நோக்கி இறுகுவதால் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தால் வாய் திறக்க முடியாது. வெளியே வந்து விட்டால் காங்கிரஸ் உறவை முறித்ததால்தான் கனிமொழியை பழி வாங்குகிறார்கள் என்று கூறி தேர்தலில் அனுதாபத்தை தேடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எப்படி இருந்தாலும் மத்தியில் ஆட்சி அதிகார சுகத்தில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் எண்ணம் காங்கிரசை கெஞ்சும் அளவுக்கு கொண்டு சென்றது. அதைத்தான் விலகல் விஷயத்தில் தி.மு.க.வின் தீர்மானத்திலும் குறிப்பிட்டுள்ளனர். பலவாறாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துக் கொண்டு சென்றோம். ஆனாலும் அவர்கள் எங்கள் உறவை விரும்பவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்கள்.
மார்ச் 3-ம் தேதி குலாம் நபி ஆசாத் டெல்லி சென்ற பிறகு கருணாநிதி 4-ந் தேதி ஒரு நாள் இறுதி கெடு. 5-ந் தேதி முடிவை அறிவிப்போம் என்று முடிவெடுத்தார்.
அதுவரையிலும் காங்கிரஸ் இறங்கி வரும் என்றுதான் கருணாநிதி நினைத்திருந்தார். 5-ந் தேதி உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டும் வரையிலும் வாசல் கதவை திறந்து வைத்து கொண்டு தங்கபாலுவாவது வருவாரா என்று காத்து கிடந்தார். ஆனால் 4-ந் தேதி நள்ளிரவே காங்கிரஸ் தி.மு.க.வுடன் உறவில்லை என்ற முடிவை டெல்லியில் எடுத்தது. இதையடுத்து தங்கள் நிலையை தெரிவித்து கருணாநிதி அய்யோ பாவம் என்ற நிலையில் நள்ளிரவில் ஒரு அறிக்கையும் விட்டுபார்த்தார். மறுநாள் மதியம் வரை சிதம்பரம் வருவார், ஆசாத் வருவார் என்று காத்திருந்த கண்கள் பொய்த்துப் போனதுதான் மிச்சம். முடிவில் வேறு வழியில்லாமல் ஒரு பெரிய தீர்மானத்தை போட்டுவிட்டு விலகளை அறிவித்துள்ளனர். ஆனாலும் காங்கிரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவாம். அமைச்சரவையிலிருந்து விலகலாம். எதாவது மிச்ச சொச்சம் காங்கிரஸ் அனுதாபப்பட்டு வருமா என்பதற்கு தான் இந்த வரியும். தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது என்று உயர்நிலை செயல் திட்டக்குழுவை கூட்டி அறிவித்தாலும் காங்கிரஸ், தான் பதில் எதுவும் தராமல் புறக்கணித்தது என்பதுதான் உண்மை. நேற்று மதியம் முதல் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளுடன் காத்திருந்தனர் உறவு முடிந்தவுடன் வெடிப்பதற்காக.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிந்ததன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. அணி பெறப் போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எந்த நேரத்தில் அழகிரி இந்த தேர்தலில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று சொன்னாரோ அது அவர்களுக்கே வந்து வந்து விட்டது.
தானும் கழகமும் இதுவரை இதுமாதிரியான சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்று தீர்மானத்தில் கருணாநிதி புலம்பியுள்ளார். உண்மைதான் இதைவிட அதிகமான அனுபவமும் இனி அவருக்கு கிட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
வேகமாக வாகனம் ஓட்டி இறந்தால் இழப்பீடு இல்லை: சுப்ரீம் கோர்ட்
03 Jul 2025புதுடில்லி: வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை சுப்ரீம்
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
பாலி தீவில் படகு மூழ்கி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 38 பேர் மாயம்
03 Jul 2025மணிலா: இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் படகு கவிழ்நது 4 பேர் உயிரிழந்தனர். 38 பேர் மாயமாகி உள்ளனர்.
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.