முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் பட்டோடி மறைவுக்கு பிரதமர் இரங்கல்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.24 - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மறைவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் 1 வார கால சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் அவர் பேச இருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரபல கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடி நேற்று காலமானார். இது குறித்த செய்தி மன்மோகன் சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. 

பட்டோடியின் மறைவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட்டோடியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த மன்மோகன் சிங், பட்டோடியின் மனைவி ஷர்மிளா தாக்கூருக்கும்,  பட்டோடியின் குடும்பத்தினருக்கும் தனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை தலைமையேற்று நடத்திய பட்டோடி நவாப், இந்திய கிரிக்கெட் விளையாட்டிற்கு உற்சாகத்தை கொடுத்தவர் என்று தனது இரங்கல் செய்தியில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஓய்வு பெற்ற பிறகும் கூட அவர் இந்திய கிரிக்கெட் உலகில் புகழுடன் திகழ்ந்து வந்தார் என்றும் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்