முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க திரண்டு வாரீர்-ஏ.கே.போஸ் அறிக்கை

வியாழக்கிழமை, 13 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,அக்.- 13 - தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று மதுரை வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க அலைகடலென திரண்டு வாரீர் என்று அ.தி.மு.க.வினருக்கு மதுரை மாநகர் மாவட்ட  அ.தி.மு.க. செயலாளர் ஏ.கே. போஸ் எம்.எல்.ஏ அழைப்பு விடுத்துள்ளார்.   இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கழக பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் வருகிற 17 -ம் தேதி நடைபெறவுள்ள  உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரை மாநகர கழக மேயர் வேட்பாளர் மற்றும் கழக மாமன்ற உறுப்பினர் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வருகிறார். புதூர் பஸ்நிலையம் முன்பு மதியம் 1 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசாரபொதுக்கூட்டத்தில் முதல்வர் அம்மா கழக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்கிறார். இந்த தேர்தல் பிரசாரபொதுக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் உள்பட அனைத்து பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும்  திரளாக கலந்து  கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறிஉள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்