முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்களுக்கு அரசு உதவி

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.14 - சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான கடைசி நாள் நவம்பர் 30ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2011-12 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச்சார்ந்த 10 எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து நிதி உதவி வழங்கப்பட உள்ளது. தவிர ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவருக்கும் பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட ரூ.20.000/- வரை நிதியுதவி அளிக்கப்படும். பெயர், முகவரி, படைப்பின் பொருள், போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

முறையான விண்ணப்பத்துடன் படைப்புகள் எழுத்து வடிவில் விண்ணப்பதாரரின் கைபேசி எண்களை குறிப்பிட்டு அரசுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.11.2011.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்