எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.18 - வன்முறை, பதற்றமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17,19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேருராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. மதுரை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளராக பாக்கியநாதன், காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கவியரசு, பாஜக வேட்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 15 ம் தேதி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்களுக்காக வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீடித்தது. காலையிலேயே பெண்களும், முதியோர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்களும் சிரமத்தை பார்க்காமல் நடந்து வந்து வாக்களித்தனர். மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பதற்றமான வாக்கு சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதே போல் மதுரை மாநகராட்சிஆணையாளரும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் விறுவிறுப்பானது. அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 20 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு மதியம் 1.30 மணிக்கு 52 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் எந்த வன்முறையும், பதற்றமும் இன்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திமுக ஆட்சியில் வன்முறையான தேர்தல் - அதிமுக ஆட்சியில் அமைதியான தேர்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2006 ம் ஆண்டு இதே போல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் ஏராளமான வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களை போட்டனர். தெற்கு வாசல் பகுதியில் ஓட்டு போட வந்த ஒரு சமூகத்தினரை வேனில் ஏற்றி திருமண மண்பத்தில் வைத்திருந்து ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனுப்பினர். மேலும் போலீசாரை கையில் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் மதுரை மாநகராட்சி தேர்தல் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் தாதமதாக துவங்கிய வாக்குப்பதிவு
மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வந்தும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுபதிவு எந்திரத்தை சரிசெய்யாமல் தாமதப்படுத்தினர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.முத்துராமலிங்கம் 7 மணிக்கே வந்தும் 8 மணி வரை வாக்களிக்க முடியவில்லை. எந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின்பு மேயர் வேட்பாளருக்கான எந்திரம் சரியாகி ஓட்டுப்போட துவங்கியதும், வார்டு கவுன்சிலருக்கான எந்திரம் வேலை செய்ய வில்லை. இது குறித்து முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் புகார் செய்தார். இதன் பின்பு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


