எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,அக்.18 - வன்முறை, பதற்றமின்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17,19 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து மனு தாக்கல் முடிந்து, பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 10 மாநகராட்சி, 60 நகராட்சி, 259 பேருராட்சி, 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று முதற்கட்ட தேர்தல் நடந்தது. மதுரை மாநகராட்சியில் அதிமுக மேயர் வேட்பாளராக வி.வி.ராஜன்செல்லப்பா, திமுக வேட்பாளராக பாக்கியநாதன், காங்கிரஸ் வேட்பாளராக ஐ.சிலுவை, தேமுதிக வேட்பாளராக கவியரசு, பாஜக வேட்பாளராக ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 15 ம் தேதி வரை அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ, புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, கே.தமிழரசன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிமுக வேட்பாளர்களுக்காக வீதி,வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரம் முடிவுற்ற நிலையில் நேற்று மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நீடித்தது. காலையிலேயே பெண்களும், முதியோர்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். வயதானவர்களும் சிரமத்தை பார்க்காமல் நடந்து வந்து வாக்களித்தனர். மதுரையில் உள்ள 100 வார்டுகளிலும் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் அமைதியாக இந்த தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவும் எடுக்கப்பட்டது. மதுரை மாநகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பதற்றமான வாக்கு சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார். இதே போல் மதுரை மாநகராட்சிஆணையாளரும் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டார்.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியம் விறுவிறுப்பானது. அனைத்து வாக்குச்சாவடியிலும் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். காலை 11 மணிக்கு 20 சதவீதம் இருந்த வாக்குப்பதிவு மதியம் 1.30 மணிக்கு 52 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் எந்த வன்முறையும், பதற்றமும் இன்றி மதுரை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.
திமுக ஆட்சியில் வன்முறையான தேர்தல் - அதிமுக ஆட்சியில் அமைதியான தேர்தல்
திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2006 ம் ஆண்டு இதே போல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது தமிழகம் முழுவதும் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சியில் ஏராளமான வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டுக்களை போட்டனர். தெற்கு வாசல் பகுதியில் ஓட்டு போட வந்த ஒரு சமூகத்தினரை வேனில் ஏற்றி திருமண மண்பத்தில் வைத்திருந்து ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு அனுப்பினர். மேலும் போலீசாரை கையில் வைத்துக்கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்து நடைபெறும் மதுரை மாநகராட்சி தேர்தல் ஒரு சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரம் தாதமதாக துவங்கிய வாக்குப்பதிவு
மதுரை அவனியாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்காளர்கள் ஓட்டு போட வந்தும் தேர்தல் அலுவலர்கள் ஓட்டுபதிவு எந்திரத்தை சரிசெய்யாமல் தாமதப்படுத்தினர். அதிமுக புறநகர் மாவட்ட செயலாளரும், திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான எம்.முத்துராமலிங்கம் 7 மணிக்கே வந்தும் 8 மணி வரை வாக்களிக்க முடியவில்லை. எந்திரம் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. பின்பு மேயர் வேட்பாளருக்கான எந்திரம் சரியாகி ஓட்டுப்போட துவங்கியதும், வார்டு கவுன்சிலருக்கான எந்திரம் வேலை செய்ய வில்லை. இது குறித்து முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான நடராஜனிடம் புகார் செய்தார். இதன் பின்பு வேறு எந்திரம் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு துவங்கியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.