முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆமதாபாத் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத்,அக்.20 - ஆமதாபாத் மெட்ரோபாலிடன் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையொட்டி வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.  டெல்லி ஐகோர்ட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடிக்க செய்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டு வெடித்ததற்கு இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தினர் பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வரும்நிலையில் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் வெடிகுண்டு வைத்திருப்பாதக நீதிபதிக்கு மிரட்டல்  கடிதம் வந்துள்ளது. இதையும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள்தான் அனுப்பியுள்ளனர். அதில்,கோர்ட்டு கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இந்த குண்டு எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும்  விரைந்து வந்து கோர்ட்டு முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். கோர்ட்டு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கோர்ட்டின் 8 மாடி கட்டிடம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டு இருப்பதாக தெரியவில்லை. வெறும் புரளி என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவி செய்து சோதனை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்