எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மார்ச் - 9 - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர் நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். என்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ