எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மார்ச் - 9 - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர் நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். என்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.