எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.1 - தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் ஜெயலலிதா என்று மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விழாவில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இந்த இனிய விழாவில் நான் கலந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் தொழில் துறையின்கீழ் செயல்பட்டுவரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் கரும்பு உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் முதலில் பதிவாகும் 8,000 ஏக்கர் நிலத்தில் விதைக்கரும்பு இலவசமாக வழங்குதல், 60 வயதிற்குட்பட்ட சர்க்கரை
ஆலை தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு மற்றும் புலிப்பரகோவில் கிராமத்தில் அரசாங்க நேரடி கொள்முதல் நிலையம் துவங்க ஆணை வெளியிட்டு ஆலையின் நலனிலும் கரும்பு விவசாயிகள் நலனிலும் அக்கரை கொண்டுள்ள
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ள மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
தொன்மை வாய்ந்த இவ்வாலை முதன் முதலில் 1961ஆம் ஆண்டு நாளொன்றுக்கு கரும்பு பிழித்திறன் 800 டன்கள் என்ற அளவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 2500 டன்கள் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள தமிழகத்தில் ஒட்டுமொத்த மக்களின் வளர்ச்சிக்கு விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பது அவசியமாகிறது. மேலும், விவசாயம் சார்ந்த தொழில்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சர்க்கரை ஆலைகள் தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் சுமார் 3.50 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு இதன் மூலம் சுமார் 385 இலட்சம் டன் கரும்பு உற்பத்தி
செய்யப்படுகிறது. இந்திய நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாகும். தமிழ்நாட்டில் தற்போது கூட்டுறவு துறையில் 16 சர்க்கரை ஆலைகளும், பொதுத் துறையில் 2 சர்க்கரை ஆலைகளும், தனியார் துறையில் 26 சர்க்கரை
ஆலைகளும் ஆக மொத்தம் 44 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.
முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட உள்ள புதிய தொழில் கொள்கை2011 மற்றும் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட விஷன்2025 ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்துறையை முதன்மை மாநிலமாக கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆக்கnullர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகளின் nullடித்த வளர்ச்சியினை கருத்தில்
கொண்டு தமிழக அரசால் தற்போது ஆலைகளில் இணை மின் உற்பத்தி மற்றும் எத்தனால் வடிப்பகங்களுடன் கூடிய நவீனமயமாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளாகங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக 10 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1241 கோடி செலவில் 183 மெகாவாட் உற்பத்தி திறனுடன் இணைமின் உற்பத்தி திட்டம் நிறுவப்பட்டு வருகிறது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறையை ஈடுகட்டும் பொருட்டு அமராவதி மற்றும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எத்தனால் வடிப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இவ்வாலை தற்போது புணரமைக்கப்பட்டு 20112012 ஆம் ஆண்டில் சுமார் 1 இலட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டு nullர்வாங்க சுத்திகரிப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் மேற்கொள்ள மற்றும் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.6.28 கோடி வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இவ்வாலையில் பணிபுரிந்து தன்விருப்ப ஓய்வு திட்டத்தின்கீழ் பணி ஒய்வில் சென்ற ஊழியர்களின் கோரிக்கையினை முதல்வர் ஜெயலலிதா கனிவுடன் பரிசீலித்து 60 வயதிற்குட்பட்டவர்களை மீண்டும் தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்த்து கொள்ள ஆணையிட்டுள்ளார்கள்.
மேலும், கரும்பு உற்பத்தியாளர்கள், ஆலை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் ஆலை சிறப்பாக செயல்பட தனது மனப்nullர்வமான ஒத்துழைப்பினை வழங்கி உறுதுணையாய் இருக்க வேண்டுமென இந்த வேளையில் கேட்டுக்
கொள்ள கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் அதிநவீன தொழிற்நுட்பங்களின் உதவி மற்றும் புதிய பண்ணைக் கருவிகளை கொண்டும் முன்னேறிய கரும்பு சாகுபடி முறைகளை பல்கலைக்கழக விஞ்ஞானிகளிடமிருந்தும் கேட்டறிந்து அவற்றை கரும்பு விவசாயிகளுக்கு நேர்முக விளக்கம் அளித்து கரும்பு சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் வாயிலாகவும் கரும்பு விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும் என்பதை கருத்தில் கொண்டு nullடித்த நவீன கரும்பு உற்பத்தி திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் சுமார் 7500 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த ரூ.12.93 இலட்சம் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார்கள் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சொட்டு nullர் பாசனம் நிறுவிட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதுடன் கரும்பு உற்பத்திக்கு தேவைப்படும் சொட்டு nullர் வழி உரம் மற்றும் கரும்பு வளர்ச்சி
ஊக்கிகள் வழங்கிட கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மானியமாக ரூ.10,000/ வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், இந்த ஆலை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் குறிப்பாக கரும்பு உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொண்டு இவ்வாலை தொடந்து சீறிய முறையில் செயல்பட்டு பொன்விழா மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களாகிய எங்களை இவ்விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.