எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டிச. - 6 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவு தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாகவும் இந்த விஷயத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சுஷ்மா சுவராஜ், சீதாராம் எச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை சமீபத்தில் எடுத்தது. மத்திய அரசின் இந்த முடிவை பல மாநில முதல்வர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போன்ற பெண் முதல்வர்கள் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மத்திய அரசின் முடிவு அமல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இவர்கள் கருத்து தெரிவித்தனர். இதே கருத்தை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் சமீபத்தில் தெரிவித்தார். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக கிட்டத்தட்ட 9 நாட்கள் பாராளுமன்றம் ஸ்தம்பித்துப் போனது. இந்த நிலையில் மத்திய அரசு தனது முடிவை நிறுத்தி வைத்து விட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மத்திய அரசு தன் முடிவை நிறுத்தி வைத்து விட்டதாகவும், அன்னிய முதலீடு தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிடம் பேசிய சுஷ்மா சுவராஜ் மற்றும் சீதாராம் எச்சூரி போன்ற தலைவர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.
இந்த முடிவை நிறுத்தி வைக்க தற்போது அரசு விரும்புகிறது. இருப்பினும் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக நேற்று காலையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சீதாராம் எச்சூரி ஆகியோருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது பாராளுமன்றத்தில் இது தொடர்பாக ஏற்பட்டு வரும் அமளி குறித்து நிதியமைச்சரிடம் சுஷ்மா எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும் இந்த விஷயத்தில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுஷ்மா கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தில் புதன் கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அப்போது அரசின் முடிவை அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று நிதியமைச்சரிடம் சீதாராம் எச்சூரி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. எனவே மத்திய அரசின் முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்படக் கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் புதன்கிழமையன்று சபை கூடுவதற்கு முன்பாக அனைத்து கட்சி கூட்டமும் கூட்டப்படும் என்றும் தெரிகிறது.
இந்த பிரச்சினைக்கு இவ்வாறு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் கூட புதன்கிழமை பாராளுமன்றம் கூடும் போது விலைவாசி உயர்வு, கறுப்பு பணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் சபையில் மீண்டும் அமளியை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிகிறது. ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தை கலக்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டமாக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.