எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, டிச.15 - இந்தியாவை சீனா மீண்டும் தாக்குமா? என்ற கேள்விக்கு கருத்துச்சொல்ல பிரதமர் மன்மோகன் சிங் மறுத்து விட்டார். என்றாலும் எல்லை பிரச்சினைக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இரு நாடுகளின் கொள்கையாக இருக்கிறது என்று அவர் கூறினார். பாராளுமன்றத்தின் லோக் சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒரு தகவலை தெரிவித்தார். இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்த ஆயத்தம் ஆகி வருவதாகவும் இதற்கான முக்கிய பகுதிகளை சீனா குறித்து வைத்துள்ளதாகவும் இந்த தாக்குதல் விரைவில் நடக்கலாம் என்றும் தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக முலாயம்சிங் யாதவ் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து தான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
இரு நாடுகளின் எல்லை தொடர்ந்து அமைதியாக இருந்து வருகிறது என்றும் எனவே இந்தியாவை தாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து கருத்தை பரிமாற அரசு விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பிரம்மபுத்திரா தண்ணீரை சீனா நிறுத்திவிட்டதாக முலாயம்சிங் கூறியதையும் பிரதமர் மறுத்தார்.
இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நீரை சீனா நிறுத்தாது என்று தனக்கு உயர் மட்டத்திலிருந்து உறுதி கூறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகள் என்று நாம் சொந்தம் கொண்டாடும் பகுதிகள் சிலவற்றில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், இது போன்ற விஷயங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள இரு நாடுகளின் ராணுவ தளபதிகள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சீனாவுடன் இந்தியா நட்புறவு மற்றும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் இதே போல சீனாவும் இதே கொள்கையை கடைப்பிடித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் இதே கொள்கையைத்தான் இதற்கு முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியும் பின்பற்றி வந்தது என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். எல்லை பிரச்சினையில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இந்த பேச்சுவார்த்தைகளில் கடந்த 2005 ம் ஆண்டு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது என்றும் ஆனால் அதன் பிறகு இந்த பேச்சுவார்த்தையில் அவ்வளவாக முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
காசா மக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும்: அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
19 Oct 2025நியூயார்க், காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்
-
3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம்: சைக்கிளில் உலகம் சுற்றும் இளைஞர்
19 Oct 2025பாரீஸ் : சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.
-
உயிர் தப்பிய 25,000 அமெரிக்க மக்கள்.. கரீபியன் கடலில் சம்பவம் குறித்து ட்ரம்ப் விளக்கம்
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.