முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் சொத்து குவிப்பு: குற்றவாளிக்கு காவல்

சனிக்கிழமை, 14 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜன.14 - ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜய் சாயியை 3 நாட்களுக்கு சி.பி.ஐ. காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நிறுவனங்களில் பல கம்பெனிகள் முறைகேடாக சொத்துக்களை குவித்திருப்பதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட 74 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த விஜய்சாய் என்ற தொழில் அதிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 ம் தேதி கைது செய்யப்பட்ட விஜய் சாய், தற்போது ஐதராபாத்தில் உள்ள சந்தல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சி.பி.ஐ. காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்தெரிவித்த சில தகவல்களின் அடிப்படையில் விஜய்சாயியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் அவரை தங்களது காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். 

இந்த கோரிக்கையை ஏற்ற சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விஜய் சாயியை 14,15,16 ஆகிய தேதிகளில் சி.பி.ஐ. காவலில் வைக்க அனுமதி வழங்கியது. இந்த 3 நாள் சி.பி.ஐ. காவலுக்கு பிறகு விஜய்சாயியை வருகிற 17 ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்