முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்கள்சக்தி - நேரத்தை வீணாக்க விரும்பவில்லை

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.- 14 - இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு எங்களின் சக்தி, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.தெரிவித்தார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட 22வது மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் ராஜபாளையத்தில் நடக்கிறது. இதில் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இந்த மாநாட்டில் மாநில நிர்வாகிகள் தேர்வும் நடக்கிறது. தற்போதைய அரசியல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. நீர்வளத்தை மேம்படுத்த தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தட்டுப்பாட்டால் தொடர்ந்து தொழில் துறையில் தமிழகம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை போக்க மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று. அரசியல் மாற்றத்தை இடைத்தேர்தல் ஏற்படுத்தாது. இடைத்தேர்தலில் போட்டியிட்டு எங்களின் சக்தி, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. யாரும் எங்களிடம் ஆதரவு கேட்கவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மயிலேறி, நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்