எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.6 - சென்னை கவுரிவாக்கம் சேலையூரை சேர்ந்தவர் சுலைமான் (வயது57). தொழில் அதிபர். இவருக்கு செம்மரக்கட்டை கடத்தலிலும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29–ந் தேதி வீட்டை விட்டு சென்ற இவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சுலைமானின் மகள் நசிமாபானு சென்னை பள்ளிக்கரனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்னை, பள்ளிக்கரனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு தலைமையிலான போலீசார் சுலைமானை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது ‘ரிங்டோன்’ மட்டும் கேட்டது. நீண்ட நேரம் ரிங்டோன் கேட்டும் அவர் எடுக்கவில்லை. ஒரு நாள் மட்டும் இயங்கிய செல்போன் அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதனை வைத்து விசாரித்தபோது அந்த செல்போன் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே அம்முண்டி பகுதியில் இருந்தது தெரிய வந்தது.
அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அதில் வேலூரை அடுத்த திருவலம் இ.பி.கூட்ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் அவரிடம் பேசியது தெரியவந்தது. சரவணனை பிடித்து போலீசார் விசாரித்தபோது செம்மரக்கட்டை வியாபாரத்திற்காக சுலைமானை அழைத்ததாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை வேல்நகர் அருகே உள்ள பாலா என்பவர் நிலத்தில் அமர்ந்து செம்மர வியாபாரம் தொடர்பாக பேசி கொண்டிருந்தோம்.
செம்பராயநல்லூர் பகுதியை சேர்ந்த செம்மரக்கட்டை வியாபாரத்தில் தொடர்புடைய காளி (24), சரத் (19), சதீஷ் மற்றும் நிலத்தின் உரிமையாளர் வேல்நகர் பாலா ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், காளி, சரத், சதீஷ், பாலா ஆகிய 5 பேரும் சேர்ந்து சுலைமானை தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் சுலைமானின் உடலை வேல்நகர் பாலாவின் தோட்டத்திலேயே புதைத்துள்ளனர். சுலைமானிடம் இருந்து 15 சவரன் நகைகள், ரூ.40 ஆயிரம் செல்போன் மற்றும் கார் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனைவரும் தலைமறைவாகி விட்டனர். காரை காட்பாடியில் உள்ள பார்க்கிங் பாயிண்டில் நிறுத்தி உள்ளனர். இதையடுத்து சரவணன், பாலாவை போலீசார் கைது செய்தனர்.
2 பேரையும் போலீஸ் துணை சூப்பிரண்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், பள்ளிக்கரனை இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் சுலைமானின் உடல் புதைக்கப்பட்ட வேல்நகர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுலைமானின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்டினர்.
வருவாய் துறையினர் முன்னிலையில் சுலைமானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் புதைக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. தடய அறிவியல் நிபுணர் பாரி ஆய்வு செய்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவனைக்கு பிணம் அனுப்பப்பட்டது.
இந்த கொலையில் தொடர்புடைய காளி, சரத், சதீஷ் ஆகியோர் கடந்த மே மாதம் 25–ந் தேதி செம்பராயநல்லூரில் நடந்த ரிச்சர்டு என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மரக்கட்டை கடத்தல் தகராறில் சென்னை தொழில் அதிபர் ஒருவர் திருவலம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே இன்று தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
25 Jan 2026தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
25 Jan 2026சென்னை, 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்’ வழங்க மு.க.ஸ்டாலின் ஆ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.


