முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளஹஸ்தி கோவிலில் அலை மோதிய பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, அக்.29 - தெலுங்கு காலண்டர்படி கார்த்திகை மாதம் நேற்று முன் தினம் பிறந்தது.

கார்த்திகை முதல் நாள் திங்கட்கிழமை என்பதால் அங்குள்ள சிவன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவு திரண்டு வழிப்பட்டனர். வாயு தலமான காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் இலைமோதியது.

அதிகாலை 4 மணிக்கே நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டனர். இரவு வரை பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன் தினம் ஒரே நாளில் மட்டும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

இதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நாக சதுர்த்தியை முன்னிட்டு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி மாவட வீதியில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். பெண்கள் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்