முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உங்களை கேள்வி கேட்கும்

தற்போது, மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். இதன்மூலம் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை எம்ஐடி பல்கலைக்கழகத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூட ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். அதேப்போல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலி தனமாக கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

புது முயற்சி

பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறை.

நீர் பட்டால் வெடிக்கும் ரசாயனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை ஊற்றி அணைப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான் அறிவியலின் சிறப்பு. ஆம், சில தனிமங்கள் தண்ணீர் பட்டாலே பட்டென்று வெடித்து விடும் என்றால் ஆச்சரியம் தானே... பொட்டாசியம், சோடியம், லித்தியம், ரூபிடியம, சீசியம் போன்றவைதான் அவை. இவை தண்ணீர் பட்டால் வெடிக்கும் திறன் கொண்டவை. வெளியில் எடுத்து விட்டால் மிகவும் சமத்தாக அமைதியாக இருந்துவிடும்.

முறையான பயிற்சி

தொடை பகுதியை வலிமையாக்கும் பயிற்சிகள் ஐஸோடானிக், ஐஸோமெட்ரிக் என்று இரு வகைப்படும். பயிற்சியின்போது குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி, தசைகளுக்கு இறுக்கம் தந்து வலு சேர்ப்பது ஐஸோமெட்ரிக். இது முன் தொடையை வலிமையாக்கும். தசைக்கும் மூட்டுக்கும் தொடச்சியாக அசைவு கொடுத்து வந்தால் அது ஐஸோடானிக். இது பின் தொடையை வலுப்படுத்தும்.

பேஸ்புக் எண்ணிக்கை

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரோக்கியத்தை பெற

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். ஆளி விதைகள், பூசணி விதைகள்,  எள்ளு விதைகள், வெந்தயம், சியா இவைகள் இதயத்தின் ஆரோக்கியத்தைச் சீராக்கும் 5 முக்கிய விதை உணவுகள். மனித உடலில் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, விட்டமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago