முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம்

இன்றைக்கு பல இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால் அலுத்துக் கொள்கிறார்கள். தெரு வியாபாரிகள் சிலர் வாங்கக் கூட மறுத்து விடுகின்றனர். புரளி உண்மையை விட வேகமாக பரவுகிறது. இந்நிலையில் 2 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் விரைவில் லட்சாதிபதியாகி விடலாம். இது தொடர்பாக வெளியான செய்தி ஒன்றில் ஓஎல்எக்ஸ் தளத்தில் பழைய 2 ரூபாய் நாணயங்களை, பழங்கால பொருள்கள் சேகரிக்கும் நபர்கள் வாங்குவதாக விளம்பரங்கள் வந்துள்ளன. எனவே இவற்றின் மதிப்பு ரூ. 5லட்சம் வரை கிடைக்குமாம். அதிலும் 1994, 1995, 1997, 2000 அச்சிடப்பட்ட நாணயங்களுக்கு அதிக கிராக்கி. இணையதளத்துக்கு சென்று முறைப்படி பதிவு செய்து வழிமுறைகளை பின்பற்றினால் நல்ல விலைக்கு இவற்றை விற்கலாம் என்கின்றன ஊடக செய்திகள்.

அமிர்தம் போன்ற சுவை

இந்து மதத்தில் சிவ பெருமானை துதிக்கும் பக்தர்கள் சைவர்கள் என்றும் திருமாலை தொழுபவர்கள் வைணர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வைணர்கள் தங்களது இஷ்ட தெய்வமான மதுரை கள்ளழகர் போன்ற தெய்வங்கள் திரு உலா வரும் போது அவர்களை வரவேற்கும் விதமாக அக்கார வடிசல் என்ற ஒரு இனிமையான பிரசாத்தை உருவாக்குவார்கள். தூய தமிழில் அக்காரம் என்பது இனிப்பை குறிக்கும் வெல்லத்திற்கான பெயராகும். இந்த வெல்லத்தை பயன்படுத்தி தயாரிக்கும் அக்கார வடிசல் பிரசாதம், நெய், முந்திரி, திராட்சை போட்டு நன்றாக குழையும் வகையில் அரிசியை தண்ணீருக்கு பதிலாக பாலை சுண்ட காய்ச்சி அதில் போட்டு குழைவாக வடிப்பார்கள். இந்த அக்கார வடிசல் சுவை அமிர்தமாக இருக்கும்.

பயத்தை போக்க...

துபாயில் ‘டெடிபியர்’ பொம்மைக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். அவர்களின் பயத்தை போக்க பொம்மைகளுக்கு சிகிச்சை அளிக்கும் புதுமையான திட்டம் ஒன்றை துபாய் அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

மருதாணி

நகங்களின் மேல் சிறிது அளவு டூத்பேஸ்ட்டை தடவி காய விடுங்கள். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பிறகு தேய்த்து எடுத்தால், நகங்களின் மீது உள்ள மருதாணி கறைகள் முழுமையாக நீங்கி விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு கலந்து கொள்ளுங்கள். அவை இரண்டும் சமமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கலவையை ஒரு பருத்தித் துணியால் எடுத்து உங்களின் நகங்களின் மீது தேய்த்தால் மருதாணி கறை போயே போச்... இட்ஸ் கான்.

ஆக்கிரமிக்கும் செயலிகள்

இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாட வேலைகள் பெரும்பாலவற்றை செல்போன் செயலிகள் மூலமே முடித்து விடமுடியும். செயலிகளால் வேலைகள் எளிதாக முடிந்தாலும், ஸ்மார்ட்போன்களின் வேகத்தைக் குறைப்பதில் இவை முக்கியமான பங்காற்றுகின்றன. ரேம் மெமரி மட்டுமல்லாது, இன்பில்ட் மெமரியிலும் கணிசமான இடைத்தை செயலிகள் ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு. ஃபேஸ்புக், உபர், ஜிமெயில் மற்றும் ஸ்நாப் சாட் போன்ற செயலிகளே மெமரியை அதிகம் பயன்படுத்திக் கொள்வதாக சமீபத்திய ஒரு ஆய்வு கூறுகிறது. ஃபேஸ்புக் செயலியை கடந்த மே 2013ல் ஐபோனில் 32 எம்.பி. இடத்தைப் பிடித்த ஃபேஸ்புக் செயலி, தற்போது 388 எம்.பி. இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அதாவது 12 மடங்கு அதிகமான இடத்தினை ஃபேஸ்புக் செயலி எடுத்துக் கொள்கிறது. அதேபோல 2013ல் 4 எம்பி சைஸில் இருந்த ஸ்நாப்சாட் செயலி தற்போது, 203 எம்பி சைஸ் கொண்டதாக மாறியுள்ளதாக சென்சார் டவர் கூறியுள்ளது.

555 நாட்கள் இதயம் இல்லாமல் வாழந்தவர்

24 வயதுடைய ‘ஸ்டான் லார்கின்’(Stan Larkin) என்ற வாலிபருக்கு தான் 2014 ஆம் ஆண்டு மிச்சிகன் மெடிக்கல் யூனிவெர்சிட்டியில் (University of Michigan Frankel Cardiovascular Centre)செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இவர் அமெரிக்க்காவின் மிச்சிகன் நகரை சேர்ந்தார்.  ஸ்டான் லார்கின் பேமலியல் கார்டியோமயோபதி(familial cardiomyopathy) என்ற இதய நோயினால் பாதிக்கப்பற்றிருந்தார். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு இரண்டு வாரங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லையெனில் இவர் இறந்துவிடுவார் என டாக்டர்கள் கூறினர். அவருக்கு உடனடியாக மாற்று இதயம் கிடைக்காததால்,   சின்கார்டிஓ என அழைக்கப்படும் செயற்கை இதயத்தை பொறுத்த முடிவு செய்துள்ளனர். இது  சீரான ரத்த அழுத்தத்தை செயற்கையாக உடலுக்கு கொடுக்குப்பதற்கும் உதவுகிறது. இதற்காக 13 கிலோ எடையுடைய கம்ப்ரெஸ்ஸரை தனது பையில் எடுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டும். இந்த கம்ப்ரெஸ்ஸிலிருந்தான் இரு டியூபுகள் வழியாக சுத்தம் செய்யப்பட்ட காற்று வயிற்றின் வழியாக செயற்கை இதயத்துடன் பொருத்தப்பட்டுள்ளது .இந்த கருவி 24 /7  மணி நேரமும்  அவர் உடம்பிலேயே இருக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த நிமிடத்தில் உயிர் போய்விடும். மாற்று இதயம் கிடைக்காததால் 17 மாதங்கள் அதாவது 555 நாட்கள் அவர் இவ்வாறே உயிர் வாழ்ந்தார். பின்னர் ஒரு விபத்தில் இறந்தவரின் இதயம் இவருக்கு மாற்றி பொருத்தப்பட்ட பிறகு இவரிடமிருந்து இந்த கருவி அகற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago