முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

குறிப்பிட்ட நாள் நேரத்தில் மெயில் அனுப்ப...

எதிர்கால இமெயில் அனுப்பும் வசதிகளை தருவதில் LetterMeLater என்ற இந்த வசதிதான் சிறப்பாக செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும்.உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும்.பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்

தண்டவாள கற்கள்

வெப்பம், நிலஅதிர்வு காரணமாக ரயில் தன்டவாளங்கள் சுருங்கி, விரிவதால், தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே ஜல்லிக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருக்கவே ஜல்லிக் கற்கள் மீது தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.

கர்நாடக சங்கீதம் சில குறிப்புகள்

கர்நாடக சங்கீதம் குறித்து இன்றைக்கும் பரவலாக பல்வேறு கற்பிதங்கள் நிலவி வருகின்றன. உண்மையில் தமிழிசை தான் பிற்காலத்தில் கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. அதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் தொடங்கி பல பழந்தமிழ் நூல்களில் உள்ளன. ஆனால் வடமொழி பழைய இலக்கியங்கள் எதிலும் சாஸ்திரிய இசைக்கான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே தமிழிசை குறித்த கல்வெட்டுகளும் சான்றுகளும் ஏராளமாக உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.எனவே ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்தது கர்நாடக இசை எனப்படும் தமிழிசைதான். அது பிற்காலத்தில் பல்வேறு இசை வடிவங்களின் கலப்பால் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி என பிரிவுகளை கண்டது. கர்நாடக  இசையில் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர். அதே போல தமிழிசைக்கும் மும்மூர்த்திகள் என அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

விண்வெளி ஆபத்து

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் வளர்சிதை மாற்றத்தால், அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறையும். மேலும், எலும்புகள் கரைந்து அவர்களின் சிறுநீர் வழியாக வெளியேறும் என்பதால், அதை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார். பூமிக்குத் திரும்பியவுடன் அந்த சிறுநீர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இரவில் பிறந்தவர்கள் குணம்

சூரிய அஸ்தமனத்திற்கு பின் மற்றும் சந்திரன் உதிக்கும் நேரத்தில் பிறந்தவர்கள் நல்ல சிந்தனையாளர்கள். இந்நேரத்தில் பிறந்தவர்கள் கலை மற்றும் இசையில் நல்ல ரசனைமிக்கவர்களாக இருப்பர். இரவு நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் தாய் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

கோதுமையின் பலன்

கோதுமையில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் உள்ளாதல் நம் உடலுக்கு மிகவும் ஏற்றது. மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை தீர்க்க  காலை உணவில் கோதுமை சேர்த்துக்கொண்டால் அவை தீரும். கோதுமையில் நார்ச்சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது. இவை உடல் இயக்கம் சீராக நடைபெறவும், நாள்பட்ட நோய் தாக்கங்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago