எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர்: பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது என்று விருதுநகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருதுநகரில் நடந்த காமராஜர் பிறந்த தின விழாவில் முதல்வர் எடப்பாடி மேலும் பேசியதாவது,
பசியை மட்டும் விரட்டினால் போதாது, அவர்கள் சத்தானவர்களாகவும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் காமராஜரின் மதிய உணவு திட்டத்தினை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக மாற்றினார். வெறும் சத்துணவுடன் நில்லாமல், இளைய தலைமுறையினருக்கு அனைத்து வகையான சத்துகளும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா, தினமும் சூடான கலவை சாதத்துடன் பயறு வகைகள் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் வழங்கி பெருந்தலைவரின் திட்டத்தை மேலும் மெருகேற்றினார். இவ்வாறு பெருந்தலைவர் கொண்டு வந்த திட்டத்தை அ.தி.மு.க. அரசு பலவகைகளிலும் மெருகேற்றி செயல்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து அம்மாவின் அரசு, அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், 2018-19-ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், எத்தனையோ துறைகள் தமிழகத்தில் இருந்தாலும், அனைத்துத் துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கு மிக அதிக அளவு ஒதுக்கீடாக 27ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே இதற்கு சான்றாகும்.
தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு
மிகத் தெளிவான திட்டமிடலின் காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகளும், இந்த வகுப்புகளுக்குரிய பொதுத் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் தேதிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களின் மன அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மாணவ, மாணவியர்களுக்கான பல திட்டங்கள் அம்மா வழியில் செயல்படும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு படிப்பிற்கு தேவையான விலையில்லா சீருடை, காலணி இடைநிற்றலை குறைத்திட சிறப்பு ஊக்கத் தொகை, விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, என அனைத்தும் அம்மா வழியில் செயல்படும் அரசால் தொடர்ந்து மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சாதனை படைத்த அரசு
இந்தத் திட்டங்களுக்காக 2018-19-ம் ஆண்டில் ஆயிரத்து 967 கோடியே 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா வழியில் செயல்படும் அரசால் பொதுத் தேர்வுகளில் அறிவிக்கும் தரமுறை கைவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிம்மதியை அளித்துள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களுக்கு அவர்களுடைய கைபேசி மூலமாக தேர்வு முடிவுகள் வெளியான 2 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டு சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு. மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் தமிழில் அச்சிட்டு வழங்கும் முறை மார்ச் 2017 பொதுத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு தமிழக கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களில் ஒரு சிலவற்றை மற்ற மாநிலங்களில் உள்ள கல்வித் துறை, தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்தி வருகின்றன. கர்ம வீரர் காமராஜர் பள்ளிக்கல்விக்கு எவ்வாறு ஊக்கம் அளித்தார்களோ, அது போல் அம்மாவின் அரசு உயர் கல்வித்துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு அம்மா ஆட்சி பொறுப்பேற்ற போது, உயர்கல்வி படித்திருந்த மாணவர்களின் சதவீதம் 21. இன்றைய தினம் தமிழகத்தில் 46.94 சதவித மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
காமராஜரின் கனவு நிறைவேறியது
பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு அம்மாவினுடைய அரசால் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், அம்மா உயர் கல்விக்கு அளித்த ஊக்கமும், 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியதும் தான். அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு கடந்த ஆண்டு, மேலும் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளது. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழை மாணவ, மாணவியரும் குறைந்த கட்டணத்தில் கல்வியறிவு பெறுவதற்காக, உயர்கல்வி படிப்பதற்காக, இன்றைக்கு 2011-லிருந்து இன்று வரைக்கும் ஆகமொத்தம் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்த அரசு அம்மாவினுடைய அரசு. 1961-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பொது நூலகச் சட்டத்தை இயற்றி, 454 கிளை நூலகங்களையும், எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட மைய நூலகங்களையும் ஏற்படுத்தினார். இப்படிப்பட்ட மக்கள் திட்டங்களால் தான்.
அணைகளை கட்டிய கர்மவீரர்
காமராஜர் ஆட்சி என்னும் சொற்றொடர் இந்திய அரசியல் சொல்லகராதியில் இடம்பெற்றன. விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்து உணவு உற்பத்தியைப் பெருக்க ஆறுகளின் குறுக்கே பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் பல்வேறு அணைகளை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் - ஆழியார் திட்டம், கீழ்பவானி - நீர்த் தேக்கத் திட்டம், அமராவதி - அணைக்கட்டுத்திட்டம், சாத்தனூர் - நீர்த்தேக்கத் திட்டம், வைகை - அணைக்கட்டுத் திட்டம், மணிமுத்தாறு - உயர்மட்ட கால்வாய் திட்டம் இப்படி பல அணைகளை கட்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தற்காலம் அறிவியல் காலம். இதற்கு அடிப்படை தேவை மின்சக்திதான்.
இந்த மின்சக்தியை பெருக்காமல் தொழில் வளர்ச்சிகாண முடியாது என்பதை நன்கு அறிந்து பல மின் திட்டங்களை பெருந்தலைவர் செயல்படுத்தினார். அதே போல், அம்மா 2011-ல் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற போது ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்தடை இருந்தது. இன்னும் 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று அம்மா சூளுரைத்தார், சொன்னதை நிறைவேற்றினார். அம்மா அவர்கள் வழியில் இன்றும் ஆளுகின்ற நம்முடைய அரசால் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக திகழ்கிறது.
காமராஜர்.ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் தொழில் புரட்சி ஏற்பட்டது. அதேபோல் அம்மா முதலீட்டாளார்களை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தினார். அம்மாவின் வழியில் வரும் 2019-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மா அரசால் மீண்டும் நடத்தப்படவுள்ளது.
பெருந்தலைவரின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்கு சுட்டிக் காட்டுகின்ற உண்மையாகும். சென்னையில் உள்ள கர்மவீரர் காமராசர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக 21.6.1978 முதல் தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இதற்கான உத்தரவினை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறப்பித்தார். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 19 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
23 May 2025சென்னை: சென்னையில் நேற்று (மே 23) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனையானது.
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்புப்படை விரைவு
23 May 2025கோவை: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-05-2025
23 May 2025 -
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
23 May 2025சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இ.பி.எஸ். வலியுறுத்தல்
23 May 2025சென்னை: நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இனி இனிப்பிலும் கூட 'பாக்' இல்லை: 'மைசூர் ஸ்ரீ’ என மாறிய மைசூர் பாக்
23 May 2025ஜெய்ப்பூர்; இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.
-
தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு உறுதி தொடக்கக் கல்வி இயக்ககம் அறிக்கை
23 May 2025சென்னை: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
-
அவசரமாக தரையிறங்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்
23 May 2025புதுடெல்லி, சேதமடைந்த விமானத்தை தரையிறக்க இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான்.
-
பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் ஜூன் 3-ல் விரிவாக்கம்
23 May 2025சென்னை: பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் வரும் ஜூன் 3-ந்தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
-
வீழ்த்தவே முடியாத மாவீரர் பெரும்பிடுகு முத்தரையர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்
23 May 2025சென்னை: போர்க்களத்தில் எதிரிகளால் வீழ்த்தவே முடியாத வாகைப்பூ சூடிய மாவீரராக திகழ்ந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் அறிவுரை
23 May 2025சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
23 May 2025நாட்டிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்தார்.
முதல் டெஸ்ட்...
-
டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
23 May 2025டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
-
பாக்.கிற்கு 1 பில்லியன் டாலர் ஏன்? சர்வதேச நாணய நிதியம் விளக்கம்
23 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நடுவர்களை அறிவித்த ஐ.சி.சி
23 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இறுதிப்போட்டி...
-
ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பூங்காவுக்கான டெண்டர் வெளியீடு
23 May 2025சென்னை: ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்: ராஜினாமா செய்ய முகமது யூனுஸ் முடிவு
23 May 2025டாக்கா, வங்கதேசத்தில் தேர்தலை விரும்பாத முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
-
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார்
23 May 2025புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று (24ம் தேதி )நடைபெற உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓகா ஓய்வு: கடைசி வேலை நாளிலும் 10 தீர்ப்பு
23 May 2025புதுடில்லி: ஓய்வுபெறும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.எஸ். ஓகா, மரபை ஒதுக்கி, கடைசி வேலை நாளிலும் 10 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.
-
சிங்கம்புணரி குவாரி விபத்து: இருவர் கைது; உரிமையாளர் தலைமறைவு
23 May 2025சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
-
ஏற்காட்டில் 48வது கோடை விழா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
23 May 2025ஏற்காடு: ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
-
மின்சாரத்துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை: அமைச்சர் சிவசங்கர்
23 May 2025பெங்களூரு: எதிர்வரும் ஐந்து முதல் ஏழாண்டுகளில் மின்சாரத் துறைக்கு ரூ.2 லட்சம் கோடி முதலீடு தேவை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
காஷ்மீர் செல்கிறார் ராகுல்
23 May 2025புதுடெல்லி, பாகிஸ்தானில் தாககுதலில் நடைபெற்ற இடத்தையும் பாதிக்கப்பட்டோரையும் ராகுல் காந்தி சந்திக்கிறார்.
-
டெஸ்ட்: மேத்யூஸ் திடீர் ஓய்வு
23 May 2025சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார் .