முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு : சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மருத்துவ படிப்புக்கான இடங்களில்  50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். ஓ.பி.சி, பி.சி. மற்றும் எம்.பி.சி. ஆகிய பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். நடப்பாண்டில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய தொகுப்பில் 27 சதவீத இடத்தை ஓ.பி.சி. பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத அகில இந்திய இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து