முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்: வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : இலங்கைக்கு எதிராக, ஐ,நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்தது.

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது. தங்கள் நாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நாடுகளை இலங்கை அரசு கேட்டுக் கொண்டது,

இதை ஏற்று இந்தியாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை போர்க்குற்ற தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது. 

இலங்கைக்கு ஆதரவாக  சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.  இலங்கைக்கு எதிரான மேற்கூறிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து  22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும்  வாக்களித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து