முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஞ்சிய ஐ.பி.எல் போட்டியில் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 30 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : ஐக்கிய அமீரகத்தில் நடைபெறவுள்ள எஞ்சிய ஐ.பி.எல் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று 

இந்தியாவில் ஆறு மைதானங்களில் ஐ.பி.எல் 2021 சீசன் டி20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. சுமார் ஒருமாத காலம் சிறப்பான வகையில் போட்டிகள் சென்ற நிலையில், மே 3-ம் தேதி கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன்பின் டெல்லி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 4-ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

நடத்த முடிவு 

இந்த நிலையில் பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் - அக்டோபரில் மீதமுள்ள கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த பேட் கம்மின்ஸ், எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயோ-பபுள் பாதுகாப்பு... 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து விளையாடியுள்ளார். மீண்டும் ஐ.பி.எல் போட்டிக்கு திரும்பாததற்கு அதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து