முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

வியாழக்கிழமை, 15 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி: நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம், அதனால் இங்கு நீட் தேர்வு உண்டு என்று புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கல்வி அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கல்வித்துறை தொடர்பாக நேற்று அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். மேலும் பல்வேறு தரப்பினரும் துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகளையும் அளித்தனர். இந்நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு.

கேள்வி- கல்லூரி மாணவர்களுக்கு எந்த முறையில் தேர்வு நடக்க உள்ளது?

பதில் - அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேசிவிட்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனில்தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன்.

கேள்வி - நிர்ணயிக்கப்பட்ட 75 சதவீதத்தை விட தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்துள்ளது அதிகமாக உள்ளதே?

பதில் - தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாகக் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி- புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டா?

பதில் - நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நம்முடைய அரசாங்கத்தை நடத்த முடியும். அதனால் இங்கு தேர்வு உண்டு.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து