முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதார பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 10 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடில்லி : நாட்டில் தொலைதுார பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்களுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், நாட்டின் தொலை துார பகுதிகளுக்கும் மிகவும் கஷ்டப்பட்டு தடுப்பூசிகளை சுகாதார பணியாளர்கள் கொண்டு செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, அவர் வெளியிட்டிருந்த பதிவில் சுகாதார பணியாளர்கள் பணி என்றென்றும் நினைவிருக்கும் என, கூறியிருந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

நாட்டில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சுகாதார பணியாளர்கள் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் தடுப்பூசி திட்டம் வெற்றி அடைந்ததற்கு இவர்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது பாராட்டு

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து