முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் 2 நீர்யானைகளுக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பிரஸ்சல்ஸ் : பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள பழமையான உயிரியல் பூங்கா ஒன்றில் 2 நீர் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளாக மனித குலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் உயிர்கொல்லி கொரோனா வைரஸ் நாய், பூனை ஆகிய செல்ல பிராணிகளையும், சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகளையும் விட்டுவைப்பதில்லை.  அந்த வகையில் பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் உள்ள பழமையான உயிரியல் பூங்கா ஒன்றில் 2 நீர் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்த 2 நீர்யானைகளுக்கும் கொரோனாவுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றுக்கு தொற்று இருப்பது உறுதியானதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து