முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச்செயலர் தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
OPS 2023-02-20

Source: provided

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது என அறிவிக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க, பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை கட்சி தலைமை அறிவித்தது. இதன்படி நேற்று (18ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்தார் பழனிசாமி. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (18ம் தேதி) தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடித விவரம்., அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது. கடந்தாண்டு ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு தொடர்பாக தீர்மானங்கள் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே பொதுத்தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதம்.

பொதுத்தேர்தல் செல்லாது என அறிவித்து நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடித்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தமனு மீது நாளை (இன்று - மார்ச்.19) விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து