எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் நடத்தை விதிமுறையில் படிநிலை ஒன்றின் கீழ் விதி 2.5-ஐ ராணா மீறியுள்ளார். அவர் தனது விதிமீறலை ஒப்புக் கொண்டு அதற்கான அபாராதத் தொகையை கட்ட சம்மதித்துள்ளார். படிநிலை ஒன்றில் வீரர் ஒருவர் விதிமீறலில் ஈடுபட்டால், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே விதிமீறலில் ஈடுபட்ட ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருகிற மே 3 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட ஹர்ஷித் ராணாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
___________________________________________________
மும்பை அணி குறித்து கிளார்க்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமை இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்டில் அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவார்களா என எனக்குத் தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் நாம் வெளியில் பார்ப்பதைக் காட்டிலும் அணிக்குள் நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். சிறந்த வீரர்கள் பலரை அணியில் வைத்துக் கொண்டு மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றி பெறத் தவறுகிறது.
அணியில் அவர்களுக்குள் ஒற்றுமையில்லை என நினைக்கிறேன். அந்த அணியில் ஏதோ ஒரு விஷயம் தவறாக இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து அணியாக விளையாடவில்லை. தனிநபர்கள் சிறப்பாக செயல்பட்டால் மும்பை அணியால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும். ஆனால், இது போன்ற பெரிய தொடர்களை வெல்ல வேண்டுமென்றால் தனிநபரின் செயல்பாடுகளைக் காட்டிலும் ஒரு அணியாக ஒற்றுமையாக செயல்படுவது அவசியம் என நினைக்கிறேன் என்றார்.
___________________________________________________
அடுத்த சுற்றில் மெத்வதெவ்
ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை தகுதிபெற்றார். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர், 6-1, 6-0 என, உள்நாட்டு வீராங்கனை சாரா சொரைப்ஸ் டோர்மோவை எளிதாக வீழ்த்தினார். அடுத்ததாக காலிறுதியில், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவை சந்திக்கிறார் ஸ்வியாடெக். போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் மாயா, 6-4, 6-4 என்ற நேர் செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை வென்று அவருக்கு அதிர்ச்சி அளித்தார். போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் துனிசியாவின் ஆன்ஸ் ஜபியுர் 6-0, 6-4 என்ற செட்களில், 9-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை வெளியேற்றினார்.
உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 6-7 (5/7), 6-4 என்ற செட்களில், அமெரிக்காவின் ராபின் மான்ட்காமெரியை போராடி வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்துள்ளார். அதில் அவர், மற்றொரு அமெரிக்கரான டேனியல் காலின்ஸுடன் மோதுகிறார். 13-ஆம் இடத்திலிருக்கும் காலின்ஸ் முந்தைய சுற்றில் 3-6, 6-4, 6-1 என்ற கணக்கில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை சாய்த்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 5-7, 7-6 (7/4), 6-3 என்ற செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை வெளியேற்றினார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வந்திருக்கும் மெத்வதெவ், அதில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்லிக்கை சந்திக்கிறார். போட்டித்தரவரிசையில் 17-ஆவது இடத்திலிருக்கும் பப்லிக், 3-6, 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், 14-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை வென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ரிசர்வ் வீரர்கள் அறிவிப்பு
21 May 202420 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்த முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
-
ராஜீவ் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் மலரஞ்சலி
21 May 2024காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மலர் வளையம் வைத்து அஞ்சல
-
சென்னை பிராட்வே பஸ் நிலைய மாதிரி புகைப்படம் வெளியீடு
21 May 2024சென்னை, நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
காவிரி ஆணைய தீர்மான நகல்களை கொளுத்தி தஞ்சையில் போராட்டம் நடத்திய விவசாயிகள்
21 May 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மேகதாது அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத
-
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு
21 May 2024கோபி : ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
-
தமிழ்நாட்டு மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா? - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
21 May 2024சென்னை : தமிழக மக்கள் மீது வீண் பழி சுமத்துவதா என்று கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள
-
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 2.5 டி.ம்.சி. நீரை திறக்க வேண்டும் : கர்நாடக அரசுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
21 May 2024டெல்லி : தமிழ்நாட்டுக்கு காவிரியில் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 2வது கட்டம் ஜூலையில் தொடக்கம்
21 May 2024சென்னை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்டம் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த பிரபல யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
21 May 2024சென்னை, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது.
-
வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது : 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
21 May 2024சென்னை : வங்கக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகுவதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
-
15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 May 2024சென்னை, 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மல்லை தமிழ் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என்று தெரிவித்துள
-
பிரிட்டன் தேர்தலில் இந்தியர் போட்டி
21 May 2024லண்டன், தெலுங்கானாவில் பிறந்து பிரிட்டனில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவர், அந்நாட்டு பார்லிமென்ட் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
-
தீவிர காற்று சுழற்சி: சிங்கப்பூர் சென்ற விமானத்தில் திடீர் நடுக்கத்தால் பயணி பலி
21 May 2024பாங்காக், லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம், தீவிர காற்று சுழற்சி காரணமாக மேகங்களில் உரசியதால் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
கர்நாடகத்தில் துணை நடிகை கொலை: தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு
21 May 2024மைசூரு, கர்நாடகத்தில் துணை நடிகை கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாகியுள்ள வித்யாவின் கணவர் நந்தீஷை போலீசார் தேடி வருகின்றனர்.
-
மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் நீட்டிப்பு
21 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.இதே
-
கோடை விடுமுறையையொட்டி நெல்லை - பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு
21 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: வெளியே தெரியும் நந்தி சிலை
21 May 2024சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிந்ததால் நீர் தேக்கப் பகுதியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
பட்டப்பகலில் மர்மநபர்கள் அட்டூழியம்: காரைக்குடியில் 80 பவுன் தங்கநகைகள் வழிப்பறி
21 May 2024காரைக்குடி, காரைக்குடியில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்கநகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியை, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிப்பறி செய்து கொள்ள
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.