எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவள்ளூர் : எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா..? என்று திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் தீர்மானம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ.க. அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்டன கூட்டம்....
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்தது.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிலைநாட்டுவோம்....
அப்போது அவர் கூறுகையில், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம்.. வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்கு தடைக்கல்லை போட்டு வருகிறது. நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று மத்திய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.
கடுமையாக பாதிப்பு....
தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்த பார்க்கிறார்கள். தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றால் கலைக்கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைந்த முதுகோடு தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகுவைத்த அவலம் நடந்தது. ஆனால் இப்போது, தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
பொறாமையோடு...
அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதே எனது அணுகுமுறையாக இருக்குமென பிரதமர் மோடி கூறியிருந்தார். மாநிலங்களின் பிரச்னை எனக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினாரே. அப்படி நடந்தாரா?. பிரதமர் மோடி தாம் கூறியதுபோல கடந்த 10 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறாரா?. ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது.
அடிமைக் கூட்டமல்ல...
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தி.மு.க. காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா?
நிதியை வழங்காமல்....
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை. இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம். ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ? இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ? திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு போராடும்....
தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது. கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக தி.மு.க. எப்போதும் ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும்.
உரிமைகளை பறிப்பதே....
சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது. மாநில அரசுகளை பழிவாங்கு செயலை தான் மத்திய அரசு செய்கிறது. கல்வி நிதியை தராமல் வஞ்சிப்பது நியாயமா? தேசியக் கல்விக்கொள்கை எல்லோருக்குமானாதா? மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா?சிறப்பாக செயல்படும் தமிழகத்தை வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பி காட்டமாக பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா: பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு பார்லி., உறுப்பினர்கள் எதிர்ப்பு
03 Mar 2026லாகூர், மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா என்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் 2 முக்கிய தலைவர்கள் கொலை
03 Mar 2026டெல் அவீவ், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நாங்குநேரி சம்பவத்தில் விஜய் கேள்வி
03 Mar 2026சென்னை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு (நேற்று முன்த
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - அரசு தகவல்
03 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சக
-
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
03 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
எங்களிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன: அமெரிக்காவால் எப்போதும் போரிட முடியும்: அதிபர் ட்ரம்ப் திடீர் மிரட்டல்
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவிடம் வரம்பில்லாத அளவுக்கு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டும் வகையில் ஈரானுக்கு எச்
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.1,560 குறைந்தது
03 Mar 2026சென்னை, தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,480 குறைந்து விற்பனையானது.
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 787 ஆனது
03 Mar 2026தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வருகை
03 Mar 2026சென்னை, போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் தேர்வுகள் ஒத்திவைப்பு
03 Mar 2026மஸ்கட், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
வருகிற 6-ம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது
03 Mar 2026நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்
03 Mar 2026பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
லெபனானில் கூடுதலாக பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் தீவிரம்
03 Mar 2026டெல்அவீவ், லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
-
போருக்கு மத்தியில் 4.3 ரிக்டர் அளவில் ஈரானில் திடீர் நிலநடுக்கம்
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


