எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவள்ளூர் : எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா..? என்று திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் தீர்மானம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ.க. அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்டன கூட்டம்....
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்தது.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிலைநாட்டுவோம்....
அப்போது அவர் கூறுகையில், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம்.. வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்கு தடைக்கல்லை போட்டு வருகிறது. நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று மத்திய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.
கடுமையாக பாதிப்பு....
தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்த பார்க்கிறார்கள். தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றால் கலைக்கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைந்த முதுகோடு தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகுவைத்த அவலம் நடந்தது. ஆனால் இப்போது, தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
பொறாமையோடு...
அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதே எனது அணுகுமுறையாக இருக்குமென பிரதமர் மோடி கூறியிருந்தார். மாநிலங்களின் பிரச்னை எனக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினாரே. அப்படி நடந்தாரா?. பிரதமர் மோடி தாம் கூறியதுபோல கடந்த 10 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறாரா?. ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது.
அடிமைக் கூட்டமல்ல...
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தி.மு.க. காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா?
நிதியை வழங்காமல்....
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை. இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம். ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ? இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ? திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு போராடும்....
தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது. கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக தி.மு.க. எப்போதும் ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும்.
உரிமைகளை பறிப்பதே....
சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது. மாநில அரசுகளை பழிவாங்கு செயலை தான் மத்திய அரசு செய்கிறது. கல்வி நிதியை தராமல் வஞ்சிப்பது நியாயமா? தேசியக் கல்விக்கொள்கை எல்லோருக்குமானாதா? மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா?சிறப்பாக செயல்படும் தமிழகத்தை வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பி காட்டமாக பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
கணக்கில் வராத பணம் கண்டுபிடிப்பு: டெல்லி ஐகோர்ட் நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை
21 Mar 2025புதுடெல்லி : கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம
-
51,327 புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
21 Mar 2025சென்னை : புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு 51,327 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
காரைக்குடியில் பயங்கரம்: ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
21 Mar 2025காரைக்குடி : காரைக்குடியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
21 Mar 2025சென்னை : ரூ.7 ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மக்களின் மீது கடனை சுமத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை: இ.பி.எஸ்.
21 Mar 2025சென்னை : கடன்மேல் கடன் வாங்கி, தமிழ்நாட்டு மக்களின் மீது கடனை சுமத்தியது தான் இந்த அரசின் சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-03-2025.
21 Mar 2025 -
ரயில்வே திட்டங்களில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
21 Mar 2025சென்னை : ரயில்வே திட்டங்களுக்கான நிதியில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்: சென்னையில் பரபரப்பு
21 Mar 2025சென்னை : கைது செய்து அழைத்துச் சென்றபோது வாகனத்தில் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி ஒருவரை போலீஸார் சுட்டுப் பிடித்த சம்பவம் சென்னை கிண்டியில் நடந்துள்ளது.
-
உ.பி.யில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே அறுவைச்சிகிச்சை செய்து கொண்டவர்..!
21 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நபர் தற்போது தனது வீட்டில் குணமாகி வருகின்றார்.
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள்
21 Mar 2025சென்னை : சட்டசபையில் கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
படப்பிடிப்பை முடித்த கையோடு தீவிர அரசியலில் களமிறங்குகிறார் விஜய்?
21 Mar 2025சென்னை : 25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் த.வெ.க. தலைவர் விஜய் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ரேஷன் கடைகள் குறித்து 97,535 புகார்கள்: சட்டப் பேரவையில் அமைச்சர் தகவல்
21 Mar 2025சென்னை : ரேஷன் கடைகளில் சேவை குறைபாடு தொடர்பாக 97,535 புகார்கள் வந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் கூறியுள்ளார்.
-
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு
21 Mar 2025இந்தோனேசியா : இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
-
கல்லூரி மாணவர்களுக்கு தரமான மடிக்கணினி வழங்கப்படும்: : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
21 Mar 2025சென்னை : கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் தரமான மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார்.
-
திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே இனி பணி வழங்கப்படும் : ஆந்திர முதல்வர் திட்டவட்டம்
21 Mar 2025திருப்பதி : திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
4 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து கர்நாடகா சட்டப்பேரவைில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமளியால் பரபரப்பு
21 Mar 2025பெங்களூரு : சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள், மசோதாவின் நகலை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். &n
-
தமிழ்நாட்டில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 26 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்
21 Mar 2025புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய இணை மந்திரி பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க கல்வித்துறையை கலைத்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு
21 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
21 Mar 2025பாட்னா : தேசிய கீதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் அவமதித்த விவகாரம் தொடர்பாக பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
ஜம்மு - காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது: அமித்ஷா பெருமிதம்
21 Mar 2025புதுடில்லி : உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகம் நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவி
-
ஒரு பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து புதிய சாதனை : பிரதமர் மோடி பெருமிதம்
21 Mar 2025புதுடெல்லி : ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
-
நாய்க்கடிக்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர்
21 Mar 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு மருந்துகள் இருப்பில் உள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன
-
அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் : சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு
21 Mar 2025சென்னை : அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம
-
ஹனி டிராப் மோசடி விவகாரம்: கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி
21 Mar 2025பெங்களூரு : ஹனி டிராப் மோசடி குறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பா.ஜ.க. எம்.எல்.ஏ. க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.