எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ். தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.
2-வது டெஸ்ட் டிரா: தொடர் சமன்
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்
9-வது டி.என்.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் கவுண்டியில் கெய்க்வாட்
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.
தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவிப்பு
அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் ஐ.பி.எல்.உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது
தோனி குறித்து ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
11 Jun 2025சேலம் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனால் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
புதிதாக 324 பேருக்கு பாதிப்பு: நாட்டில் கொரோனா தொற்று 7 ஆயிரத்தை நெருங்குகிறது
11 Jun 2025புதுடில்லி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
-
தீப்பிடித்த கப்பலில் இருந்து மாலுமிகள் மீட்பு : இந்தியாவுக்கு சீனா நன்றி
11 Jun 2025புதுடில்லி : கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு நடுவே நடுக்கடலில் தீப்பற்றிக் கொண்ட சரக்கு கப்பலில் இருந்து சீனாவை சேர்ந்தவர்களை மீட்ட இந்திய கடற்படைக்க
-
இளநிலை நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதிவெளியீடு
11 Jun 2025புதுடெல்லி, நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வருகிற 14-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
ஆக்சியம்-4 மிஷன்: விண்வெளி பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
11 Jun 2025புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு 'பால்கன்-9' ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்னும் தனி
-
மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
11 Jun 2025சென்னை, தங்கம் விலை மீண்டும் ரூ.72 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் கேள்வி கேட்போம்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
11 Jun 2025ஈரோடு, ஈரோட்டில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல, விவசாய
-
விருதுநகர் அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல்
11 Jun 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியா? - பிரேமலதா விளக்கம்
11 Jun 2025சென்னை : அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
-
விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
11 Jun 2025சென்னை, விருதுநகர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியது
11 Jun 2025காசா சிட்டி : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
-
தொடரும் பதற்றம் எதிரொலி: லாஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு
11 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்ற சோதனைகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்கள், தீ வைப்பு சம்பவங்களுக்
-
ரஷ்யா மீண்டும் டிரோன் தாக்குதல்: உக்ரைனில் 5 பேர் பலி
11 Jun 2025கீவ் : உக்ரைனில் ரஷ்யா மீண்டும் நடத்திய டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
சாதி சங்கங்களுக்கு தடை கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jun 2025மதுரை : சாதி சங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள்: ஐகோர்ட் மதுரை கிளை முக்கிய உத்தரவு
11 Jun 2025மதுரை : கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
11 Jun 2025சென்னை : வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
டெல்லி: ஆக்கிரமிப்பு வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பு
11 Jun 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன.
-
கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை: மத்திய அமைச்சருக்கு வெங்கடேசன் எம்.பி. பதில்
11 Jun 2025மதுரை, கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது.
-
அதிபர் ட்ரம்ப் குறித்த பதிவுகள்: வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்
11 Jun 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகி
-
தொடரும் ராகிங் சம்பவங்கள்: 89 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு யு.ஜி.சி., நோட்டீஸ்
11 Jun 2025புதுடில்லி : நாடு முழுவதும் ராகிங் விதிமுறைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jun 2025சென்னை, தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொறியியல் கலந்தாய்வு; ரேண்டம் எண் வெளியீடு
11 Jun 2025சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி. பயன்பாட்டில் விரைவில் புதிய விதிமுறை அமலாகிறது : மத்திய அமைச்சர் தகவல்
11 Jun 2025புதுடெல்லி : அதிகரித்துவரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த ஏ.சி.
-
சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
11 Jun 2025சென்னை : சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.
-
இங்கி. பார்லிமெண்ட்டில் கெளரவம்: பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் வாழ்த்து
11 Jun 2025சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கெளரவிக்கப்படவுள்ள சென்னை ஆசிரியை கனக லட்சுமிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்