முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோனிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      விளையாட்டு
Edappadi 2020 11-16

Source: provided

'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ். தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார். 

2-வது டெஸ்ட் டிரா: தொடர் சமன்

அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி  2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.  

பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.

வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம் 

9-வது டி.என்.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.  

இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

யார்க்ஷயர்  கவுண்டியில் கெய்க்வாட்

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.  ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.

தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு  2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவிப்பு

அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் ஐ.பி.எல்.உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது

தோனி குறித்து ரவி சாஸ்திரி 

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி.  இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.

இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார்.  அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து