எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ். தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.
2-வது டெஸ்ட் டிரா: தொடர் சமன்
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்
9-வது டி.என்.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் கவுண்டியில் கெய்க்வாட்
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.
தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவிப்பு
அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் ஐ.பி.எல்.உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது
தோனி குறித்து ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இந்திய அணியில் ஹர்ஷித் ராணா
19 Jun 2025இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
-
ஈரானின் உச்ச தலைவரை குறிவைத்தால்...ஈராக் ஷியா மதகுரு எச்சரிக்கை
19 Jun 2025ஈரான்: ஈரானில் உயர் தவைர் அயதுல்லா அலி கமேனியை குறிவைப்பதற்கு எதிராக ஈராக்கின் ஷியா பிரிவின் மதகுரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அகமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பு
19 Jun 2025அமதாபாத்: குஜராத் மாநிலம் அமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந் தேதி, புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக் குள்ளானது.
-
பிரதமர் மோடியை புகழ்ந்த இத்தாலி பிரதமர் மெலோணி
19 Jun 2025இத்தாலி: இந்தியா பிரதமரை பார்த்து நீங்கள் தான் பெஸ்ட் என்று இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோணி மகிழ்ச்சி பொங்க கூறினார்.
-
அமராவதி அணையிலிருந்து நீர் திறப்பு
19 Jun 2025கோவை: அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 47 பேர் காயம்
19 Jun 2025டெல் அவிவ்: இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியதில் 47 பேர் காயமடைந்தனர்.
-
கீவ் நகர் மீது பயங்கர தாக்குதல்: ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்க ஜெலன்ஸ்கி கோரிக்கை
19 Jun 2025உக்ரைன்: உக்ரைன்- ரஷ்யா இடையில் 3 வருடங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரு பக்கமும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல்...? வெளியான பரபரப்பு தகவல்
19 Jun 2025வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இந்தியா - இங்கி., முதல் டெஸ்ட் போட்டி இன்று லீட்சில் துவக்கம்
19 Jun 2025லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, லீட்சில் இன்று தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி...
-
த.வெ.க. மருத்துவர் அணி புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
19 Jun 2025சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
-
விளையாட்டை விட கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்
19 Jun 2025லண்டன்: விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
-
சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலி: கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு
19 Jun 2025சென்னை: சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து அங்கு கனரக வாகனங்களுக்கு தீவிர நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவிப்பு
19 Jun 2025டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
-
வரும் ஜூன் 24, 25-ம் தேதிகளில் அ.இ.அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
19 Jun 2025சென்னை: வரும் 24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
ஈரான்-இஸ்ரேல் மோதலில் மத்தியஸ்தம் செய்ய தயார் ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு
19 Jun 2025மாஸ்கோ: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின்
-
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
19 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜர்
19 Jun 2025சென்னை: திருநெல்வேலி தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், பா.ஜ.க.
-
சட்டவிரோத குடியேற்றம்; திருப்பூரில் 26 வங்கதேசத்தினர் கைது
19 Jun 2025திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
19 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
-
‘புற்றுநோய் போன்ற நாடு’ இஸ்ரேல் மீது வட கொரியா குற்றச்சாட்டு
19 Jun 2025தெஹ்ரான்: இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கொடூரமான செயல் என்று வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சோதனையின் போது வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்
19 Jun 2025டெக்சாஸ்: அமெரிக்காவில் சோதனை முயற்சியின் போது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆடும் லெவன் அறிவிப்பு
19 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பதிவு செய்த 15 நாட்களில் புதிய வாக்காளர் அட்டை தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை
19 Jun 2025புதுடெல்லி: இனிமேல் பதிவு செய்த புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 
-
இந்தியா-பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம் முதல் முறையாக டிரம்ப் ஒப்புதல்
19 Jun 2025வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள் தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்மு
-
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு: டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
19 Jun 2025புதுடில்லி: 180 பேருடன் பயணித்த இண்டிகோ விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் டில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.