முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேலூர் பயணம்

திங்கட்கிழமை, 23 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, ஜூன் 25, 26 ஆம் தேதிகளில் வேலூர் மற்றும் திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நாளை சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மூலமாக அவர் காட்பாடி செல்கிறார். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்களே உள்ளது. இந்த நிலையில் முதல்வர்  மு க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 25-ம் தேதி மற்றும் 26-ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னை ரயில் நிலையத்திலிருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் பயணம் செய்கிறார். அங்கிருந்து காரில் வேலூர் மாவட்டத்திற்கு சென்று 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரணமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ள பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து ஆற்காடு வழியாக சென்று வேலூர் சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்க உள்ளார்.இதனை தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாரை சந்தித்து பேச உள்ளார். பின்னர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இதனை தொடர்ந்து அணைக்கட்டில் இருந்து சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடுஷோ நடத்த உள்ளார். இந்த ரோடு ஷோ மூலம் மக்களை சந்தித்து மனுக்களை பெற உள்ளார். மேலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் முதல்வர்  ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இதன் மூலம் குடியாத்தம் ,கீழ்வைத்தியனான் குப்பம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயன்பெறும் வகையில் உள்ளது.இதனையடுத்து வேலூர் மாவட்டம் - அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அறிவாலயம் மற்றும் திருவுருவச் சிலையை நாளை (25.06.2025) முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.

அதற்காக நடைபெற்று வரும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் வேலூர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர்  முக ஸ்டாலின் நாளை மறுநாள் ஜூன் 26-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். அங்கு ஜோலார்பேட்டையில் சுமார் 2 கீலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் சாலையில் இருப்புறங்களில் உள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் அவர்களிடம் பெறப்படும் மனுக்களை பெற்று தீர்வு கான உள்ளார். இதனை தொடர்ந்து ஜோலையார் பேட்டையில் உள்ள புரணமைக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.தொடர்ந்து மக்களை சந்தித்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பட உள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்று மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து