முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பண்டுக்கு அபராதம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 6 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இதில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் சதத்தால் இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. அதன்படி நடுவரின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதமும், ஒன்று அல்லது இரண்டு புள்ளிகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

___________________________________________________________________________________________________

ரிங்கு சிங் திருமணம் ஒத்திவைப்பு

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயம் கடந்த 8-ம் தேதி லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதில் பல உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் என 300 பேர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களது திருமணத்தை வருகிற நவம்பர் 19-ம் தேதி வாரணாசியில் உள்ள தாஜ் ஓட்டலில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களது திருமணம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

___________________________________________________________________________________________________

ஜோஷி மறைவு: சச்சின் இரங்கல்

இருதய கோளாறு காரணமாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் ஜோஷி (77) காலமானார்.  இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 6 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

திலீப் ஜோஷி மறைவுக்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். 

___________________________________________________________________________________________________

ராகுல் டிராவிட் சாதனை சமன் 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.  

இந்திய அணியின் 2 ஆவது இன்னிங்சில் ஷர்துல் தாக்கூர் கேட்சை ஜோ ரூட் பிடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். டெஸ்ட் போட்டிகளில் டிராவிட், ரூட் ஆகியோர் இதுவரை 210 கேட்சுகள் பிடித்து அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். இதற்கு அடுத்த இடங்களில் ஜெயவர்தனே (205), ஸ்மித் (200) ஆகியோர் உள்ளனர். 

___________________________________________________________________________________________________

ரிஷப், கே.எல்.ராகுலுக்கு வாழ்த்து 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.  

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து