முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான்கு கூடுதல் டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.க்களாக உயர்வு

வெள்ளிக்கிழமை, 20 டிசம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.21 - தமிழகத்தில் நான்கு கூடுதல் டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்கு ஏ.டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:_

ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஆர்.சேகர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக ஊழல் கண்காணிப்பு பிரிவின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தோ திபெத்திய எல்லைக்காவல் படையின் டி.ஜி.பி.யாக மெகபூப் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. அசோக் குமார்,உளவுத்துறை .டி.ஜி.பியாகவு ம் , லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. சதீஷ் குமார் டோக்ரா ? லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு டி.ஜி.பி.யாகவு ம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதுதவிர மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. சீமா அகர்வால், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்