எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.15 - சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை தொடரட்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு 1 முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமுல்படுத்தப்பட்டது. இந்த கல்வி முறை தரமானதாக இல்லை என்று கூறி சமச்சீர் கல்வி பாடத் திட்டமுறையை தமிழக அரசு இந்தாண்டு மட்டும் நிறுத்திவைத்தது. இந்தாண்டு பழைய பாடத்திட்டமே அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையிலும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்தாண்டு 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று 2 நீதிபதி செளகான் உள்பட 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணயின்போது வாதி, பிரதிவாதி சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்தாண்டு 1 முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறினர். 7 முதல் 10-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறித்து இறுதி செய்ய தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு இரண்டு வார காலத்திற்குள் அமுல்படுத்தப்படும் பாடத்திட்ட அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை தொடர்பாக ஐகோர்ட்டு ஒரு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் அதுவரை 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை எந்த பாடத்திட்டத்தையும் பின்பற்றக்கூடாது என்றும் நீதிபதிகள் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


