எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஆக.- 22 - சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட இடத்தில் அதிநவீன சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் ஏகோபித்த வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலை ஓமந்தூரான் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கடந்த தி.மு.க. ஆட்சியினரால் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அதற்கு திறப்பு விழாவையும் நடத்தினார்கள். இக்கட்டிடம் தேவையற்றது. மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமர்ந்தவுடன் புகழ்வாய்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் செயல்படுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தீர்க்கதரிசனமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவரது வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தது. பிரதான எதிர்க்கட்சியாகக் கூட மக்கள் தி.மு.க.வை அங்கீகரிக்க வில்லை. தமிழக மக்களின் நலனே தன்னலமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக செலவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காக அவர் ஆழ்ந்து சிந்தித்துள்ளார். அதன் விளைவாக தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு உன்னதமான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று சட்டமன்றக் கூட்டத்தில் வெளியிட்டார்.
புதிய தலைமைச்செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஒரு பகுதி மருத்துவக் கல்லூரியாக செயல்படும், மற்றொரு பகுதி மருத்துவ ஆராய்ச்சிக்காக சிறந்த தரத்துடன் அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை செயல்படும். இந்த மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்த வகையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக சென்னையில் இயங்கும் என மகத்தான திட்டத்தை அறிவித்தார்.
இதற்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய உன்னதமான திட்டங்களில் கூட அதில் குறையுள்ளது, இது மக்களுக்கு பலனளிக்காது என சப்பை காரணங்களைக் கூறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இத்திட்டத்தையும் வரவேற்றுள்ளார். குறை சொல்ல வேண்டுமென்பதற்காக அதற்கு வழிகோல் காட்டியவன் நானே என்று கூறி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டுள்ளார். இத்திட்டம் தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பையும், மகிழ்ச்சியையும் பெற்றுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் நகர மக்களின் கருத்து
ஜெயகிருபா(25) இல்லத்தரசி.
ஏழை எளிய மக்கள் மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். வளர்ச்சியுற்ற மருத்துவ வசதியை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஏழை மக்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழக முதல்வர் அம்மா அறிவித்துள்ள திட்டம் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மருத்துவக்கல்லூரியின் அறிவிப்பு எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு அமல்படுத்தியுள்ளார்கள். இதற்காகவே அம்மாவிற்கு நன்றி கூற வேண்டும்.
சச்சிதானந்தம்(47).
இத்திட்டம் சூப்பர் திட்டம். வரவேற்கக் கூடிய அறிவிப்பு. என்னைப்போன்ற ஏழைகளுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது. அதிநவீன மருத்துவக் கல்லூரிகள் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளதால் மருத்துவ சிகிச்சைக்கு எளிதாக அமையும். இத்திட்டத்தை யாராலும் குறைகூற முடியாது என்றார்.
கோமதி(29) இல்லத்தரசி.
தமிழக மக்களின் நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கக் கூடிய திட்டங்கள் அனைத்தும் எங்களைப் போன்ற நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகவே வெளியிடுகிறார். அதேபோன்று தான் தற்போது அறிவித்துள்ள மருத்துவமனையும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். இது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும் என்றார்.
ராஜசேகர்(51) டீக்கடைக்காரர்.
மக்களின் வரிப்பணம் வீணாகக் கூடாது என்பதற்காகவே தமிழக முதல்வர் அறிவித்துள்ள இத்திட்டம் வரவேற்கக் கூடியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சென்னைக்கு வரவுள்ளதால் இது ஏழை பாமர மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இத்திட்டத்தில் சுயநலம் கிடையாது. பொதுநலமே மேலோங்கி உள்ளது. இம்மருத்துவமனையினால் தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.