எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,செப்.7 - குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம்,உத்திரப்பிரதேச மாநிலத்தில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ. உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்றும் எழுப்பு கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்றும் இருசபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. குஜராத் மாநிலத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை கவர்னர் கமலா நியமித்துள்ளார். இதற்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநில கவர்னரின் இந்த செயல் ஜனநாயகம், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கோரி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் எல்.கே. அத்வானி தலைமையில் பாரதிய ஜனதா தலைவர்கள் நேரில் சந்தித்து மனுவும் கொடுத்தனர். பாராளுமன்றத்திலும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் கடந்த 5 நாட்களாக எழுப்பி பிரச்சினை வருகின்றன. இதனால் இரு சபையிலும் ஏற்படும் கூச்சல் குழப்பத்தையொட்டி அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ராஜ்யசபையில் நேற்று 4-வது நாளாக குஜராத் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட பிரச்சினையை பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுப்பினர். குஜராத் மாநிலத்தில் லோக் ஆயுக்தாவை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். கவர்னர் கமலா பெனிவாலை திரும்பப்பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தினர். இவர்களுக்கு அ.தி.மு.க., சிவசேனா, பிஜூ ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளமுடியாமல் நேற்று மதியம் 12 மணி வரை முதல் தடவையாக ராஜ்யசபை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு குழுவில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்புவது தொடர்பாக மத்திய அரசின் தீர்மானம் தொடர்பாக அப்போது சபையில் இருந்த கே.ரகுமான் கானிடம் அ.தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். வி மைத்ரேயன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் அலுவாலியா ஆகியோர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் சுதர்ஸன் நாச்சியப்பன் மற்றும் இடது கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர்களை தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கொண்டுவந்தார். அதன் பிறகு பேசிய அலுவாலியா, இந்த தீர்மானத்தில் தவறு உள்ளது என்றார். ஏற்கனவே இதுதொடர்பாக திருத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றார். காலி இடத்தை நிரப்புவதற்கு தனித்தனியாக 2 தீர்மானங்கள் கொண்டு வரத்தேவையில்லை என்றும் கூறினார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதையொட்டி நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் தொடங்கியும் கூச்சல் குழப்பம் நிலவியதால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபை நேற்று கூடியதும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் எழுந்து குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும் பிரச்சினையை எழுப்பினர். நரேந்திர மோடியை ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலையாகும் என்று பாரதிய ஜனதா உறுப்பினர்கள் அர்ஜூன் ராம் மெஹ்வால், சரோஜ் பாண்டே, கணேஷ் சிங், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் குஜராத் கவர்னர் கமலா பெனிவாலை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். மேலும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. அதனால் மாயாவதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி உறுப்பினர்கள் கோரினர். இந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் அகிலேஷ் யாதவ் சபையின் மத்திய பகுதிக்கு சென்று மாயாவதி ஊழல்வாதி என்பது தெளிவாகிவிட்டது. உ.பி. அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் ஊழல்வாதி என்று விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது என்று கோஷமிட்டார். அதற்கு பகுஜன்சமாஜ் கட்சி உறுப்பினர் தாரா சிங் செளகான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கூச்சல் குழப்பத்திற்கிடையே கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் மீரா குமார் முயன்றார். ஆனால் கூச்சல் குழப்பம் நீடித்துக்கொண்டியிருந்தது. அதனால் சபை நேற்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.