எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.15 - சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய கலெக்டர்கள் மாநாடு நேற்று நிறைவடைந்தது. 43 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாற்று திறனாளிகளுக்கு 18 வயது முதலே ஓய்வூதியம், மீனவர் நலன் வேளாண்மைக்கு முக்கியத்துவம் போன்ற திட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்களை முதல்வர் வெளியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கு கொள்ளும் 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10 வது மாடியில் மாநாட்டை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அவர் தொடக்க உரையாற்றுகையில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
நேற்று 2 வது நாளாக மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காலை 10 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு வருகை தந்தார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் நுழைவு வாயிலில் நின்று தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். 10 வது மாடிக்கு சென்ற அவரை ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூத்த அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 32 மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், வி.ஜி.பி.ராமானுஜம் மற்றும் உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கலெக்டர்கள் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் தனது நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:-
2 நாட்களாக உங்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் பல கருத்துக்களை சொன்னீர்கள். உங்களது பணிச் சூழல் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
1991-ம் ஆண்டில் இருந்து நிர்வாகம் எப்படி நடத்தப்பட்டு வருகிறது என்பதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். அதிகாரிகள் பாரபட்சமின்மை, மனசாட்சி, இரக்கம் ஆகிய 3 நற்பண்புகளுடன் செயல்பட வேண்டும். பல மாவட்ட ஆட்சியாளர்கள் மாவட்டங்களில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். மாவட்ட ஆட்சியாளர்கள் தான் நிர்வாகத்தின் உறுதித்தன்மை வாய்ந்த வலுவான இரும்பு போன்ற அடிப்படையாக திகழ்கின்றனர்.
ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அது சமூகமான முறையில் நிகழ அதிகாரிகளின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம் ஆகும். சில வேளைகளில் எதிர்பாராத வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டது உண்டு. இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாதவாறு எதிர்காலத்தில் செயல்பட வேண்டும். நல்லாட்சிக்கு இலக்கணம் எது என்றால் வலுவான கட்டமைப்புதான். மாவட்ட ஆட்சித் தலைவர்களின் செயல்பாட்டின் மீது தான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இப்போது எல்லாம் மாவட்டத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமானது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியது நமது கடைமை ஆகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். வேளாண்மைக்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விவசாயத்திற்கு இடுபொருள் உரிய நேரத்தில் கிடைத்தாக வேண்டும். மழைக்காலம் முடிந்த பிறகு உரத்தை அளித்தால் என்ன பயன்.
அடுத்தபடியாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. பள்ளிக்கூடங்களின் கல்வித்தரம், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் போன்றவற்றில் மாவட்ட ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். உணவு தானியங்கள் சேதம் அடைய இடமளிக்கக் கூடாது. அதைப்போல் திருடு போகவும், வேறு பயன்பாட்டுக்கு அதை திருப்பி விடவும் இடம் கொடுக்கக் கூடாது.
கடலோர மாவட்ட கலெக்டர்கள் மீன் வளத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை மற்றும் அண்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாடு தடுப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாதந்தோறும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்த உத்தேசித்துள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா 43 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் டோக்கன் முறை மூலம் தற்போது ஒரு நாள் மட்டுமே கடலில் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இனி நடுக்கடலில் பல நாட்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஈரோட்டில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகே மேம்பாலம் கட்டப்படும். காரமடை வழியாக ஊட்டிக்கு புதிய பாதை கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை நெரிசல் தவிர்ப்பதற்காக லாரிகள் நிறுத்த தனியிடம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மீன் வளத் தொழில் நுட்ட மையம் உருவாக்கப்படும். இது நாகப்பட்டினத்தில் அமையவிருக்கிற மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும். பொன்னேரியில் உள்ள வருவாய்த்துறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. இந்த புதிய பிரிவு அம்பத்தூர், மாதவரம் தாலுக்காக்களில் தொடங்கப்படுகிறது. நிர்வாக வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தலைமை இடமாக செயல்படும்.
திருவண்ணாமலையில் மகா தீபம் திருவிழாவிற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி 50 சதவீதமாக உயர்த்தப்படும். கடலில் மீன் பிடிக்க செல்லும் நமது மீனவர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார்கள் வருகின்றன. அவர்களை தேடி கண்டுபிடித்து மீட்பதற்காக வாடகை ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடைபெறும். இந்த மீட்பு பணியில் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு அதிவேக நவீன படகுகள் வழங்கப்படும். தூத்துக்குடி நகரத்திற்கு கூடுதலாக குடிநீர் சப்ளை செய்யப்படும். தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்படும். தூத்துக்குடியில் உள்ள விவிடி சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும்.
பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்காக பிளாஸ்டிக் கழிவுகளை சேர்ப்பதற்கான பயிற்சி சுய உதவிகுழுக்களுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வருகை பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும். புதிய அரசு விடுதிகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு உதவி செய்யும் வகையில் அங்கு தேவைக்கு அதிகமாக உள்ள மாம்பழங்களை வாங்கி மேங்கோ மில்க் ஷேக் தயாரித்து சத்துணவு மையங்களுக்கு வழங்குவது பற்றி ஆவின் நிறுவனம் பரிசீலிக்கும். மேட்டூர் அணை ஜனவரி மாதம் மூடப்பட்டதும் அணை மற்றும் கால்வாய்கள் பராமரிப்பு பணி தொடங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து ஏற்படும் போது அவர்கள் அங்கிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதைத் தவிர்க்க திருவள்ளூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பகுதி தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளியின் ஓய்வூதியம் பெறும் வயது 45-ல் இருந்து 18 ஆக குறைக்கப்படும். ஒவ்வொறு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு சட்ட உதவிக்காக உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, பிரிண்டரும் வழங்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட 43 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.