எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, டிச.9 - திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என முழக்கமிட்டு தீபத்தை தரிசித்தனர்.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை மகா தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 29ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று (8ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பிறகு அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் பால், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு அண்ணாமலையாருக்கு வைர கிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது. உண்ணாமுலை அம்மனுக்கு தங்க காசம் அணிவிக்கப்பட்டது. 2 சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்தது. இறைவன் பஞ்சமூர்த்தியாக இருப்பதை குறிக்கும் வகையில் கருவறையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அனேகனாக (பஞ்சமூர்த்தி) இறைவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபத்திலிருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை கோவில் இளவரசு பட்டம் குமார் குருக்கள் ஏற்றினார். அப்போது பி.டி.ரமேஷ் குருககள் உள்பட பலர் அருகிலிருந்தனர். ராஜா குருக்கள் பரணி தீபத்தை பொதுமக்களின் தரிசனத்திற்காக எடுத்து வந்தார். அப்போது கோவிலுக்குள் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தீபத்தை தரிசித்தனர். பரணி தீபம் ஒவ்வொரு சன்னதியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. இதையடுத்து அத்தீபம் பர்வத ராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரணி தீபம் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பரஞ்ஜோதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுலஇந்திரா, செல்லூர் ராஜி, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று பகல் மகாதீப நிகழ்ச்சிகள் துவங்கின. கோயிலுக்குள் உள்ள தீப தரிசனம் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலை உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எடுதுது வந்து வைக்கப்பட்டன. மாலை 5.58 மணிக்கு அண்ணாமலையார் சன்னதிக்குள்ளிருந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே எடுத்து வரப்படும் அர்த்தநாரீஸ்வரர் வெளியே எடுத்து வரப்பட்டார். அப்போது பந்தங்கால் தீபம் ஏற்றப்பட்டு மலையை நோக்கி காட்டப்பட்டது. உடனே மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் தயாராக வைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது திருவண்ணாமலை நகரை சுற்றி கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தேங்காய் உடைத்து, கற்nullரம் ஏற்றி தீபத்தை வழிபட்டனர். தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையே வண்ண விளக்குகளால் ஜொலித்தது. கோயிலுக்குள் தீபதரிசனம் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு nullஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை அருகில் சென்று தரிசிக்க மலையேறினர். அவர்களுக்கு கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பக்தர்களின் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதியை வலம் வந்தனர். கார்த்திகை தீபவிழா தொடர்ச்சியாக 3 நாள் தெப்பல் திருவிழா இன்று தொடங்குகிறது. அய்யங்குளத்தில் நடைபெறும் இவ்விழாவில் இன்று இரவு சந்திரசேகரரும், நாளை இரவு பராசக்தி அம்மனும், நாளை மறுநாள் சுப்பிரமணியரும் தெப்பத்தில் சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தீபத்திருவிழாவைக் காண வருகை தந்த பக்தர்களுக்கு என்றுமே இல்லாத அளவு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரமன்ற தலைவர் என். பாலசந்தர் ஆகியோர் மேற்பார்வையில் ரூ. 1.5 கோடியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தன
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்:கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
06 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.