முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தர பிரதேசத்தில் ராகுல்காந்தி கார் முன்பு மறியல்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ, டிச.14 - உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி அங்குள்ள கட்சி ஊழியர்கள் கூட்டங்களில் பேசி வருகிறார். அவர் அலிகார் அருகே உள்ள பதாயூன் என்ற இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவதற்காக காரில் சென்று கொண்டு இருந்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றிருந்தனர். அலிகார் என்று இடத்தில் சென்ற போது திடீரென்று முலயாம் சிங்கின் சமாஜ்வாடி கட்சித்தொண்டர்கள் சிலர் ராகுலின் காரை வழிமறித்து  காரை தொடர்ந்து செல்ல விடாமல் ரோட்டில் நின்று தடுத்தனர். இதனால் ராகுலின் காரும் அவருடன் வந்த மற்ற கார்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் கீழே இறங்கி தொண்டர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது தொண்டர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட தொண்டர்களை அப்புறப்படுத்திய பிறகு ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில்  சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்