முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தீவிரவாத எதிர்ப்பு அமைப்புக்கு கேபினட் கமிட்டி ஒப்புதல்- சிதம்பரம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 21 - புதிய தீவிரவாத எதிர்ப்பு தேசிய அமைப்புக்கு பாதுகாப்புக்கான மத்திய பாதுகாப்பு கமிட்டி விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  லோக்சபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் புதியதாக தேசிய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு உருவாக்குவதற்கு பாதுகாப்புக்கான மத்திய கேபினட் கமிட்டி ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய கேபினட் கமிட்டி இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும். ஆனால் தேசிய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு குறித்து இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கவில்லை என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருக்கிறது. அதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் சபையில் கூறினர். அப்போது சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது.  அதனிடையே இந்த பதிலை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். ப.சிதம்பரம் பதில் கூறும்போதெல்லாம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களுடையை இருக்கைகளில் இருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு பதில் கூறுமாறு சிதம்பரத்தை சபாநாயகர் மீரா குமார் கேட்டுக்கொண்டார். மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக பா.ஜ.வினர் உரிமை மீறல் நோட்டீசும் கொடுத்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்