எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அதனை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி இந்த மறுதேர்வு வரும் ஜூன் 23-ம் தேதி நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி அன்று வெளியாகிறது. இதனை தேசிய தேர்வு முகமை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
தேர்வில் முறைகேடு...
கடந்த 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. மே 5-ம் தேதி நடைபெற்ற நடப்பு ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம் பயில்வதற்கான நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தத் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, நடைமுறைச் சாத்தியம் இல்லாத வகையில் சிலருக்கு கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது எனப் பல அம்சங்கள் நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கின. இதோடு வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இரு நீதிபதிகள்...
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன. முன்னதாக, கலந்தாய்வு நடத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விளக்கத்தை தேசிய தேர்வு முகமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
விரைந்து நடத்த...
இதனை அடுத்து தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கு அறிவிப்பு (நேற்று - வியாழக்கிழமை) வெளியாகும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வில்...
மேலும், 1,563 பேருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, அவர்களது அசல் மதிப்பெண் விவரம் வெளியிடப்படும். அந்த முடிவுடன் கலந்தாய்வில் பழைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் பங்கேற்பது அல்லது மறுதேர்வை எதிர்கொள்வது குறித்த முடிவை தேர்வர்கள் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 days ago |
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
02 Sep 2025சென்னை, ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்7,020 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் தமிழகத்தில் புதிதாக 15,320 பேருக்க
-
2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை வரவேற்றார் துணை முதல்வர் உயதநிதி
02 Sep 2025சென்னை : 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த ஜனாதிபதி முர்முவை துணை முதல்வர் உயதநிதி ஸ்டாலின் நேரில் வரவேற்றார்.
-
கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் : இலங்கை அதிபர் திட்டவட்டம்
02 Sep 2025கொழும்பு : கச்சத்தீவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம் என்று இலங்கை அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
02 Sep 2025சென்னை, சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
02 Sep 2025புதுடெல்லி : சிறிய இந்திய தயாரிப்பு ‘சிப்’புகள் உலகில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த தமிழ்நாடு மீனவர்கள் 10 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம்
02 Sep 2025ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 10 பேருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி 1,400 ஆக உயர்ந்தது
02 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 1,400 பேர் உயிரீழநதுள்ளனர்.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
02 Sep 2025கர்நாடகா, தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
சசிகாந்த் செந்தில் எம்.பி.யை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி
02 Sep 2025திருவள்ளூர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகாந்த் செந்தில் எம்.பி.யை கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-09-2025.
03 Sep 2025