எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து பைப் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த 5-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி, குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை அவர் நியமித்து வருகிறார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன்படி, கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, டிரம்ப் அமைச்சரவையில், இடம் பெற்றுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான டுவிட்டர் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் இணைந்து அவர் பணியாற்றுவார் என டிரம்ப் கூறினார். இந்த சூழலில், அவருடைய மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தபடி உள்ளது.
எலைஸ் ஸ்டெபானிக் என்பவரை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என முதன்முதலாக வெளியே கூறினார். இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர், தன்னுடைய கணவர் மற்றும் 3 வயது மகனுடன் வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து நியூயார்க் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, இந்த மிரட்டல் செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாதுகாப்பு மந்திரியாக நியமனம் செய்யப்பட்ட பீட் ஹெக்சேத், அவருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது என உறுதிப்படுத்தினார். இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,
பைப் வெடிகுண்டுக்கான நம்பத்தக்க அச்சுறுத்தல் வந்துள்ளது என கூறி வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து கூறினார். அப்போது, வீட்டில் என்னுடைய 7 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர் என தெரிவித்து உள்ளார்.
இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். டிரம்ப் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பணியாற்றும்படி கேட்டு கொண்டார். அதனை நான் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கழகத்தின் நிர்வாகியாக டிரம்ப் நியமித்துள்ள லீ ஜெல்டின் என்பவரும், பைப் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என உறுதிப்படுத்தி உள்ளார். இது பற்றி எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.
அவர்கள் கூறும் போது, வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டவர்களின் வீடுகளுக்கு உடனடியாக போலீசார் செல்வதற்காக இதுபோன்ற வெடிகுண்டு புரளிக்கான அழைப்புகள் விடப்படுகின்றன என தெரிவித்தனர்.
இதுவரை பாதுகாப்பு, வீட்டு வசதி, விவசாயம் மற்றும் தொழிலாளர் துறை மற்றும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் உள்பட டிரம்ப் தேர்ந்தெடுத்த 9 பேருக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இதுபற்றி டிரம்பின் குழுவில் உள்ள பெண் செய்தி தொடர்பாளரான கரோலின் லீவிட் கூறும் போது,
டிரம்ப் நியமித்தவர்களுக்கு எதிராக, அவர்களின் உயிருக்கும், அவர்களுடன் வசிப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடப்பட்டு உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் உடனடியாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு: சினே ரானா
23 Sep 2025மும்பை : இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.
-
கனமழை எதிரொலி: மேற்குவங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
23 Sep 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
23 Sep 2025சென்னை, தி.மு.க.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.