எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
______________________________________________________________________________________________
முகமது ரிஸ்வான் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் முகமது ரிஸ்வான் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் இரண்டு கேட்ச்சுகளை பிடித்தார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ரிஸ்வான் 101 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________
விஜய் ஹசாரே: கர்நாடகம் சாம்பியன்
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் விளையாடிய கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சமரன் ரவிச்சந்திரன் சதம் விளாசி அசத்தினார். அவர் 92 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அபினவ் மனோகர் 42 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே மற்றும் நச்சிகட் பூட்டே தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யஷ் தாக்குர் மற்றும் யஷ் கடம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. விதர்பா அணி 48.2 ஓவர்களின் முடிவில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் துருவ் ஷோரே 111 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். கர்நாடகம் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌசிக் மற்றும் அபிலாஷ் ஷெட்டி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சமரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
______________________________________________________________________________________________
மனு பாக்கர் உறவினர்கள் பலி
ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா யுத்வீர் சிங்கும் நேற்று சர்க்கி தாத்ரியில் உள்ள மகேந்திரகர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, தவறான பாதையில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து யுத்வீர் சிங் வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில், யுத்வீர் சிங்கும் சாவித்ரி தேவியும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாக உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு வெள்ளிக்கிழமை தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆரவாரம் முடிவதற்குள்ளாகவே மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
______________________________________________________________________________________________
சாம்சன் குறித்த வீடியோ வைரல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
______________________________________________________________________________________________
ரஞ்சியில் விளையாடும் ஜடேஜா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரும் ரஞ்சி கோப்பையில் தங்களது அணிக்காக விளையாடவுள்ளனர்.
அவர்களது வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். ஜடேஜா விளையாடுவது குறித்து சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்ததாவது: ரவீந்திர ஜடேஜா இன்று வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா: பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு பார்லி., உறுப்பினர்கள் எதிர்ப்பு
03 Mar 2026லாகூர், மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா என்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் 2 முக்கிய தலைவர்கள் கொலை
03 Mar 2026டெல் அவீவ், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நாங்குநேரி சம்பவத்தில் விஜய் கேள்வி
03 Mar 2026சென்னை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு (நேற்று முன்த
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - அரசு தகவல்
03 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சக
-
எங்களிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன: அமெரிக்காவால் எப்போதும் போரிட முடியும்: அதிபர் ட்ரம்ப் திடீர் மிரட்டல்
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவிடம் வரம்பில்லாத அளவுக்கு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டும் வகையில் ஈரானுக்கு எச்
-
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
03 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.1,560 குறைந்தது
03 Mar 2026சென்னை, தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,480 குறைந்து விற்பனையானது.
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 787 ஆனது
03 Mar 2026தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வருகை
03 Mar 2026சென்னை, போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
-
போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் தேர்வுகள் ஒத்திவைப்பு
03 Mar 2026மஸ்கட், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத
-
வருகிற 6-ம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது
03 Mar 2026நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்
03 Mar 2026பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
லெபனானில் கூடுதலாக பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் தீவிரம்
03 Mar 2026டெல்அவீவ், லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
-
போருக்கு மத்தியில் 4.3 ரிக்டர் அளவில் ஈரானில் திடீர் நிலநடுக்கம்
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்


