எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார். முதல் சுற்றில் ஹாலந்தை சேர்ந்த அனிஷ் கிரியை எதிர்கொண்டு விளையாடிய குகேஷ் கடினமாக சென்ற போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆரம்பத்தில் இருந்து பின்தங்கினார். துவக்கம் முதலே அனிஷ் கிரி சிறப்பாக காய்களை நகர்த்தினார். போட்டியின் 33-வது நகர்த்தலில் சிறு தவறு செய்ய, குகேஷ் தோல்வியை தழுவ இருந்தார். பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட குகேஷ் 42-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர்களான பி. ஹரிகிருஷ்ணா மற்றும் உலகின் நான்காம் நிலை வீரர் அர்ஜுன் எரிகைசியை எதிர்கொண்டு விளையாடினார். இந்தப் போட்டியில் ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
______________________________________________________________________________________________
முகமது ரிஸ்வான் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைப் பட்டியலில் முகமது ரிஸ்வான் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டும் அவர் இரண்டு கேட்ச்சுகளை பிடித்தார். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது ரிஸ்வான் 101 கேட்ச்சுகளைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________
விஜய் ஹசாரே: கர்நாடகம் சாம்பியன்
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. விதர்பா மற்றும் கர்நாடகத்துக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் விளையாடிய கர்நாடகம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சமரன் ரவிச்சந்திரன் சதம் விளாசி அசத்தினார். அவர் 92 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அபினவ் மனோகர் 42 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் தர்ஷன் நல்கண்டே மற்றும் நச்சிகட் பூட்டே தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யஷ் தாக்குர் மற்றும் யஷ் கடம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விதர்பா களமிறங்கியது. விதர்பா அணி 48.2 ஓவர்களின் முடிவில் 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் துருவ் ஷோரே 111 பந்துகளில் 110 ரன்கள் குவித்தார். கர்நாடகம் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, வாசுகி கௌசிக் மற்றும் அபிலாஷ் ஷெட்டி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இறுதியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தி கர்நாடகம் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சமரன் ரவிச்சந்திரன் ஆட்ட நாயகனாகவும், கருண் நாயர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
______________________________________________________________________________________________
மனு பாக்கர் உறவினர்கள் பலி
ஹரியாணாவில் ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கரின் தாய்வழி பாட்டி சாவித்ரி தேவியும், மாமா யுத்வீர் சிங்கும் நேற்று சர்க்கி தாத்ரியில் உள்ள மகேந்திரகர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, தவறான பாதையில் வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து யுத்வீர் சிங் வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில், யுத்வீர் சிங்கும் சாவித்ரி தேவியும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருப்பதாக உதவி துணை ஆய்வாளர் சுரேஷ் குமார் கூறினார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு வெள்ளிக்கிழமை தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆரவாரம் முடிவதற்குள்ளாகவே மனு பாக்கரின் குடும்பத்தார் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
______________________________________________________________________________________________
சாம்சன் குறித்த வீடியோ வைரல்
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் மிக சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சனை பாராட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், "சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக விளையாடவில்லை என்றால், அது சஞ்சு சாம்சனுக்கு இழப்பு அல்ல என்பது உங்களுக்கு தெரியும். உண்மையில் அது இந்திய அணிக்கு தான் இழப்பு. ரோகித், கோலிக்கு ஆதரவு அளிப்பதை போல சஞ்சு சாம்சனுக்கும் நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பர் 1 பேட்டராக இருக்கும் திறமையை நீங்கள் இழக்கிறீர்கள்" என்று கம்பீர் பேசியுள்ளார்.
______________________________________________________________________________________________
ரஞ்சியில் விளையாடும் ஜடேஜா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் பலரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை பிசிசிஐ கட்டாயமாக்கியது. வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரும் ரஞ்சி கோப்பையில் தங்களது அணிக்காக விளையாடவுள்ளனர்.
அவர்களது வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவும் இணைந்துள்ளார். ஜடேஜா விளையாடுவது குறித்து சௌராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜெயதேவ் ஷா தெரிவித்ததாவது: ரவீந்திர ஜடேஜா இன்று வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
புதுக்கோட்டையில் அருகே திடீரென சாலையில் இறங்கிய விமானத்தால் திடீர் பரபரப்பு
13 Nov 2025புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கீரனூர் - நார்த்தமலை சாலையில் விமானம் ஒன்று சாலையில் தரையிறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
மகளிர் உரிமைத் தொகை பெற உதவுங்கள்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
13 Nov 2025சென்னை: போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்பொழுது, மகளிர் உரிமை தொகை பெற தி.மு.க.
-
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ரவி ஒப்புதல்
13 Nov 2025சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மேலும் 3 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு திடீர் வெடிகுண்டு மிரட்டல்
13 Nov 2025புதுடெல்லி: கனடாவில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீர் வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லியில் தடையிறக்கப்பட்டது.
-
வந்தே மாதரம் பாட மறுத்த அரசு ஆசிரியர் சஸ்பெண்ட்
13 Nov 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் வந்தே மாதரம் பாட மறுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: காஷ்மீர் முதல்வர்
13 Nov 2025ஸ்ரீநகர்: அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உமர் அப்துல்லா தெரிவித்தார்.
-
குஜராத் மாநிலம் பரூச் மாவட்ட மருந்து தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி
13 Nov 2025காந்தி நகர்: மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
முக்கிய மசோதாவில் கையெழுத்திடார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்..! 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
13 Nov 2025வாஷிங்டன்: மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
-
ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்திப்பு
13 Nov 2025நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சிரிய அதிபர் சந்தித்து பேசினார்.
-
மெட்ரோ ரயில் திட்டப்பணிகள்: ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு
13 Nov 2025சென்னை: மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளை ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர்.
-
உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடம்
13 Nov 2025பெலெம்: உலக அளவில் காலநிலை ஆபத்து குறியீட்டில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஹால்டிக்கெட்எடுப்பதில் சிரமம்: தேர்வு எழுதுபவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
13 Nov 2025சென்னை: ஹால்டிக்கெட் எடுப்பதில் தேர்வர்கள் சிரமத்தை பொக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு செய்துள்ளது.
-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையிட வேண்டும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Nov 2025சென்னை : தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசு தலையீடு செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்தான்: அமெரிக்கா கருத்து
13 Nov 2025வாஷிங்டன்: டெல்லியில் தெளிவான பயங்கரவாத தாக்குதல் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ கருத்து தெரிவித்துள்ளார்.
-
தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 37 பேர் பலி
13 Nov 2025லிமா: தென் அமெரிக்கா பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி கார் வெடிப்பு: உமரின் புதிய வீடியோ ளியீடு
13 Nov 2025டெல்லி: டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக சுங்க சாவடியில் உமர் கட்டணம் செலுத்தும் சி.சி.டி.வி. பதிவு வெளியாகி உள்ளது.
-
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: முத்தரப்பு டி-20 தொடர் ராவல்பிண்டிக்கு மாற்றம்
13 Nov 2025இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு தொடருக்கான திடல்கள் மாற்றம் செய்யப்பட்டுள்
-
இன்று புதிய வீரர்களை ஏலம் எடுக்குகிறது சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம்
13 Nov 2025சென்னை: ஐ.பி.எல். ஏலத்தில் புதிய வீரர்களை இன்று ஏலம் எடுக்கவுள்ள சி.எஸ்.கே. அணி தக்கவைக்கும், கழற்றி விடும் வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது.
-
ஆணவ படுகொலை விவகாரம்: விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Nov 2025சென்னை: ஆணவ படுகொலை விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாணை ஆணையத்திற்கு உறுப்பினர்களை
நியமித்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் பலி
13 Nov 2025திரிப்பொலி: லிபியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர்.
-
பிரான்ஸ் முன்னாள் அதிபர் விடுதலை
13 Nov 2025பாரிஸ்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
டெல்லி கார் வெடிப்பில் தொடர்புடையவர்ளுக்கு தண்டனை நிச்சயம்: மத்திய அமைச்சர் அமித்ஷா
13 Nov 2025புதுடெல்லி: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
பாக்.கில் விரைவில் அரசியல் மாற்றம்? அதிகாரத்தை கைப்பற்றினார் ராணுவ தளபதி அசிம் முனிர்
13 Nov 2025இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தை ராணுவ தளபதி அசிம் முனிர் கைப்பற்றியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
13 Nov 2025புதுடெல்லி: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி ஐகோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஐ.சி.சி. அக்டோபர் மாத விருது: தென் ஆப்பிரிக்க அணி வீரர் முத்துசாமி, வீராங்கனை லாரா வோல்வார்ட் தேர்வு
13 Nov 2025துபாய்: ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.


