எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருவள்ளூர் : எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா..? என்று திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் தீர்மானம்...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ.க. அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கண்டன கூட்டம்....
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்தது.இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்று வரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிலைநாட்டுவோம்....
அப்போது அவர் கூறுகையில், வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு அல்லாதவர்கள் அல்ல நாம்.. வாதாடியும், போராடியும் நமது உரிமைகளை நிலைநாட்டுவோம். மத்திய அரசு அனைத்து வகையிலும் நமக்கு தடைக்கல்லை போட்டு வருகிறது. நம் மொழி, நிலத்தை கெடுக்கின்ற எதிரிகள் எவராக இருப்பினும் துணிவுடன் எதிர்கொள்வோம். இப்படைத் தோற்கின், எப்படை வெல்லும் என்று மத்திய ஆட்சியாளர்களை நோக்கி கேட்கின்ற வகையில் தமிழினம் திரண்டுள்ளது.
கடுமையாக பாதிப்பு....
தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்த பார்க்கிறார்கள். தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றால் கலைக்கல்லூரி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவார்கள். முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியாளர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டது. வளைந்த முதுகோடு தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகுவைத்த அவலம் நடந்தது. ஆனால் இப்போது, தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
பொறாமையோடு...
அதிகாரப் பகிர்வுக்கு வழிகாட்டுவதே எனது அணுகுமுறையாக இருக்குமென பிரதமர் மோடி கூறியிருந்தார். மாநிலங்களின் பிரச்னை எனக்குத் தெரியும் என்று பிரதமர் கூறினாரே. அப்படி நடந்தாரா?. பிரதமர் மோடி தாம் கூறியதுபோல கடந்த 10 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறாரா?. ஒரு மாநில அரசு நாட்டிற்கே எடுத்துக்காட்டாக இருந்தால், அந்த மாநில அரசுக்கு துணை நிற்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், பா.ஜ.க. அரசு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடுகிறதே என்ற பொறாமையோடு செயல்படுகிறது.
அடிமைக் கூட்டமல்ல...
தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தி.மு.க. காவலாக இருக்கிறதே என்ற எரிச்சலோடு உள்ளது. மத்திய அரசு நம்மை சிறுமைப்படுத்த பார்க்கிறது. பதவி சுகத்திற்காக மத்திய அரசிடம் பணிந்து போகும் முதுகெலும்பில்லாத அடிமைக் கூட்டமல்ல நாம். தமிழ்நாடு என்ன பிச்சைக்கார மாநிலமா?.. நாங்கள் உழைத்து, வரியை செலுத்திய பணத்தில் இருந்து எங்களுக்கான நிதியை தருவதில் என்ன பிரச்னை? மாணவர்களின் நலனுக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது நியாயமா?
நிதியை வழங்காமல்....
தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை. இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம். ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ? இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ? திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு.
தமிழ்நாடு போராடும்....
தி.மு.க. ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது. கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக தி.மு.க. எப்போதும் ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். அணி திரண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழ்நாடு போராடும்.
உரிமைகளை பறிப்பதே....
சிறப்பாக செயல்படும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு. தமிழகம் சிறுமைப்படுத்தப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் மத்திய அரசு மற்றும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் மாநில அரசுகளை அழிக்கப்பார்க்கிறது. மாநில அரசுகளை பழிவாங்கு செயலை தான் மத்திய அரசு செய்கிறது. கல்வி நிதியை தராமல் வஞ்சிப்பது நியாயமா? தேசியக் கல்விக்கொள்கை எல்லோருக்குமானாதா? மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் எண்ணம். உயிரே போனாலும் பா.ஜ.க.வின் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டோம். எங்களிடம் இருந்து வரிவசூலித்துவிட்டு எங்களையே சிறுமைபடுத்துவதுதா?சிறப்பாக செயல்படும் தமிழகத்தை வஞ்சகம் செய்கிறது மத்திய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பி காட்டமாக பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


