எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
'ஹால் ஆப் பேம்' என்ற புகழ்பெற்ற வீரர்களின் பட்டியலில் தோனி சேர்க்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இது கிரிக்கெட்டில் தனது பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், இந்த கவுரவம் வாழ்வில் எப்போதும் பசுமையான நினைவாக நிலைத்திருக்கும் என்றும் 43 வயதான தோனி கூறியுள்ளார். இந்நிலையில் ஐசிசின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ். தோனிக்கு பொருத்தமான மரியாதை என எடப்பாடி கூறினார்.
2-வது டெஸ்ட் டிரா: தொடர் சமன்
அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா ஏ கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி போட்டி நார்த்தம்டானில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய ஏ அணி 348 ரன்னும், இங்கிலாந்து லயன்ஸ் 327 ரன்னும் எடுத்தன. அடுத்து 21 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
பின்னர் 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 32 ரன்கள் அடித்திருந்த போது, ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. கம்போஜ் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது.
வாக்குவாதம்: அஸ்வினுக்கு அபராதம்
9-வது டி.என்.பி.எல். தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 16.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 11.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 18 ரன்களில் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்.யூ. ஆனார். ஆனால் பந்து லெப்ட் சைடுக்கு வெளியே பிட்ச் ஆகி அஸ்வினின் காலில் படுவதுபோல் தெரிந்தது. இதற்கு அவுட் தர மாட்டார்கள் என அஸ்வின் நினைக்க, களத்தில் இருந்த பெண் நடுவர் கிருத்திகா அவுட் வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் நடுவர் கிருத்திகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
யார்க்ஷயர் கவுண்டியில் கெய்க்வாட்
இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். ஐ.பி.எல். தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அவர் தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி பட்டாளம் உண்டு. இருப்பினும் காயம் காரணமாக இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சில லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் விலகினார்.
தற்போது காயம் சரியான நிலையில் இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ள அவருக்கு 2 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்ஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கோலஸ் பூரன் ஓய்வு அறிவிப்பு
அதிரடி ஆட்டக்காரனான நிக்கோலஸ் பூரன் ஐ.பி.எல். உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்தாண்டு நடந்த முடிந்த ஐ.பி.எல். தொடரில் அதிக சிக்சர்கள் அடுத்தவர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக 29 வயதான வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் ஐ.பி.எல்.உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது
தோனி குறித்து ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. இவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்த்து கவுரவித்துள்ளது. இதற்கு பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துகளை தோனிக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி தனது வாழ்த்துகளை வித்தியாசமாக கூறியுள்ளார்.
இது குறித்து ரவி சாஸ்திரி பேசியது பின்வருமாறு:- "அவருக்கு (தோனி) ஒரு பிக்பாக்கெட் திருடனை விட வேகமான கைகள் உள்ளன. அந்த அளவுக்கு வேகமான கைகளை தோனி ஸ்டம்பிங் செய்வதில் கொண்டுள்ளார். அவர் டக் அவுட் ஆனாலும் சரி உலகக்கோப்பையை வென்றாலும் சரி அப்படியே இருப்பார். சதத்தை அடித்தாலும் அதே போலவே இருப்பார். இரட்டை சதத்தை அடித்தாலும் அப்படியே இருப்பார். அவரிடம் பெரியளவில் எந்த மாற்றமும் இருக்காது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 Jun 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.
-
டில்லியில் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
12 Jun 2025புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. தலைவராக நானே நீடிப்பேன்: ராமதாஸ் உறுதி
12 Jun 2025விழுப்புரம், 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
12 Jun 2025தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது: திருமாவளவன்
12 Jun 2025சிதம்பரம், தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
முடிவுக்கு வந்தது மோதல்: எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்று கொண்ட அதிபர் டிரம்ப்
12 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து
12 Jun 2025சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
12 Jun 2025திருச்சி, எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் எல். முருகன் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக மாணவர்கள் புதிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jun 2025சென்னை, யு.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு முடிவுகளில் நம் மாணவர்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
12 Jun 2025சென்னை, தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
-
விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.
-
பி.எஸ்.எப். வீரர்களுக்கு மோசமான ரயில்: 4 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Jun 2025புதுடில்லி, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மிக மோசமான நிலையில் உள்ள ரயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
12 Jun 2025டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
-
விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ., விளக்கம்
12 Jun 2025புதுடில்லி, ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை
12 Jun 2025ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.
-
அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்
12 Jun 2025லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
-
தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அமைச்சர் பெரியசாமி
12 Jun 2025திண்டுக்கல், தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து: அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்
12 Jun 2025புதுடில்லி, அகமதாபாத் விமான விபத்துக்கு மத்திய அமச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
12 Jun 2025டெல்லி: சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மிக கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை
12 Jun 2025கோவை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்
-
அமெரிக்க அதிபர் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 400 பேர் கைது
12 Jun 2025லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது
-
அகமதாபாத்தில் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்
12 Jun 2025குஜராத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
-
அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்
12 Jun 2025ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
-
ஆமதாபாத் மருத்துவமனையில் குஜராத் முதல்வர் ஆய்வு
12 Jun 2025அகமதாபாத், விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், ஆமதாபாத் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
-
மேற்குவங்கத்தில் இருதரப்பினர் மோதல் 40 பேர் கைது
12 Jun 2025கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.