எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து வருவதோடு பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் மைனாரிட்டி கருணாநிதி அரசை கண்டித்து நாளை (25.2.2011) அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தி.மு.க.வினரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கென அரசால் கையகப்படுத்தப்பட உள்ள 9.75 ஏக்கர் நிலம் தி.மு.க.வினரின் கைக்குப் போகும் நிலை உருவாகி உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 8.7 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியாரால் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்றது. இதனையடுத்து, நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சென்னை உயர் nullநீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு பொது நோக்கத்திற்காக நிலத்தினை கையகப்படுத்த அனுமதி அளித்து 2008ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆட்சியருக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பான தீர்மானம் வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த நிலத்தை கையகப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மேற்படி 9.75 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு நில உரிமையாளரிடமிருந்து உள்ளூர் தி.மு.க. நபர் வாங்கிவிட்டதாகவும், மேற்படி நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டதற்கு, மாநகர் மன்றக் கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை 6 மாதம் கழித்து ரத்து செய்ய முடியும் என்றும், புதிய இடத்தை கையகப்படுத்துவதற்கான நிதி மாநகராட்சியிடம் இல்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளில் தலையிட இயலாது என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையம் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் பேட்டி அளித்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. மாநகராட்சி ஆணையரின் இந்தப் பேட்டி மக்களின் புகாரினை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 விழுக்காடு பணிகள் கூட முடிவடையவில்லை என்றும், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சாக்கடை நீnullர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் அபகரிக்கப்படுவது குறித்தோ, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தும் தி.மு.க.வினருக்கு உறுதுணையாக செயல்படுகின்ற, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆமை வேகத்தில் மேற்கொண்டு இருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், தி.மு.க.வினரின் நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 25.2.2011 வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. சிவசங்கரன், வேலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. ரேணுகோபால் மற்றும் சத்துவாச்சாரி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.எல். சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா: பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு பார்லி., உறுப்பினர்கள் எதிர்ப்பு
03 Mar 2026லாகூர், மற்றொரு போருக்கு தயாராகும் இந்தியா என்று நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் அதிபரின் பேச்சுக்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம்; தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை - அரசு தகவல்
03 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அங்குள்ள தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சக
-
ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் 2 முக்கிய தலைவர்கள் கொலை
03 Mar 2026டெல் அவீவ், ஈரான் மற்றும் லெபனானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நாங்குநேரி சம்பவத்தில் விஜய் கேள்வி
03 Mar 2026சென்னை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு (நேற்று முன்த
-
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
03 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வருகை
03 Mar 2026சென்னை, போர் சூழலில் துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் தமிழகம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
-
எங்களிடம் அதிகளவு ஆயுதங்கள் உள்ளன: அமெரிக்காவால் எப்போதும் போரிட முடியும்: அதிபர் ட்ரம்ப் திடீர் மிரட்டல்
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவிடம் வரம்பில்லாத அளவுக்கு ஆயுதங்கள் இருப்பதாகவும், அதனால் எப்போதும் போரிட முடியும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டும் வகையில் ஈரானுக்கு எச்
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ரூ.1,560 குறைந்தது
03 Mar 2026சென்னை, தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,480 குறைந்து விற்பனையானது.
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 787 ஆனது
03 Mar 2026தெஹ்ரான், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இதுவரை 787 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
போர்ப் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் தேர்வுகள் ஒத்திவைப்பு
03 Mar 2026மஸ்கட், மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் அங்குள்ள நாடுகளில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் ஒத
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: லெபனானில் 30 ஆயிரம் பேர் இடமாற்றம் - ஐ.நா. தகவல்
03 Mar 2026பெய்ரூட், லெபனான் நாட்டின் மீதான் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்கு வசிக்கும் சுமார் 30,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
வருகிற 6-ம் தேதி முதல் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது
03 Mar 2026நாகப்பட்டினம், நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது.
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
போருக்கு மத்தியில் 4.3 ரிக்டர் அளவில் ஈரானில் திடீர் நிலநடுக்கம்
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
லெபனானில் கூடுதலாக பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேல் படைகள் தீவிரம்
03 Mar 2026டெல்அவீவ், லெபனான் நாட்டில் கூடுதல் பகுதிகளைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென இஸ்ரேல் ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளத
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.


