எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் ரூ.12.0435 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்படுகிறது.
ஒரு தொகுப்பானது 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு உடையதாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தொகுப்பில் அடங்கும். முதலாண்டில் 15 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 30 தொகுப்புகளிலும், ஆக மொத்தம் 75 தொகுப்புகளில், நிலப்பரப்பு மொத்தம் 1.875 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் 7 வட்டாரங்களில் 15 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் சேகரித்து, முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், மானாவாரி தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பில் உழவு மானியம் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 37500 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பயிர்கள் 26,390 ஏக்கரிலும், பயறு வகை 10855 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 225 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்பட உள்ளது. விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் வழகாட்டுதல்படி பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்க இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கலாம். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக கால்நடை துறையின் வழிகாட்டுதல் மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதியில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி : மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி முக்கியமானது. மாவட்ட அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மானாவாரி தொகுப்பிலிருந்தும் ஐந்து அலுவலர்கள் வீதம் 75 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு மற்றும் வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய அறிஞர்கள் மூலம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வட்டார அளவிலும், பின்னர், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு விவசாய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய வேளாண்மை இணை இயக்குநர் - 9597251659, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வேப்பனப்பள்ளி-9443207504, மத்தூர்-9787508300, ஊத்தங்கரை-9486755252, சூளகிரி-9444685112, ஓசூர்-97508215656, கெலமங்கலம் மற்றும் தளி-9442630246, மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தில் ஏறத்தாழ 16000 சிறுவிவசாயிகள், குறு விவசாயிகள், மகளிர், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மானாவாரி கிராம விவசாயிகள், மழைநீரை நன்கு பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெற அனைத்து விவசாயிகளும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
12 Jan 2026


