முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இரத்தஓட்டம் சீரடைய

தாளாசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும்.

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

எட்டே மாதத்தில் ...

பஞ்சாபை சேர்ந்த ரீனா - சூரஜ் குமார் தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு வயது எட்டு மாதம். ஆனால் பத்து வயது குழந்தை சாப்பிடும் உணவை இந்தக் குழந்தை சாப்பிடுவதுதான் ஆச்சரியம். இதனால் இந்த குழந்தையின் எடை தற்போது 17 கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, மூச்சு விடுவதற்கும் தூங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீர் பட்டால் வெடிக்கும் ரசாயனங்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை ஊற்றி அணைப்பது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இருப்பதுதான் அறிவியலின் சிறப்பு. ஆம், சில தனிமங்கள் தண்ணீர் பட்டாலே பட்டென்று வெடித்து விடும் என்றால் ஆச்சரியம் தானே... பொட்டாசியம், சோடியம், லித்தியம், ரூபிடியம, சீசியம் போன்றவைதான் அவை. இவை தண்ணீர் பட்டால் வெடிக்கும் திறன் கொண்டவை. வெளியில் எடுத்து விட்டால் மிகவும் சமத்தாக அமைதியாக இருந்துவிடும்.

27 முறை மாரடைப்பு

கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட இங்கிலாந்தின் வெட்னஸ்பெரி பகுதியை சேர்ந்த 54 வயதான ராய்வுட்கால்  என்பவர் போட்டி ஒன்றில் விளையாடிய போது முதன் முறையாக இவருக்கு மார்பில் வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் இரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இதனிடையே இவருக்கு கரோனரி ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயாரானபோது குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர். பலமுறை இருதயம் நின்று துடித்துள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கும், இதனால் இவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவு என அவர் அஞ்சியுள்ளனர். அடுத்த நாள் மதியம் ஒரு மணி அளவில் இவருக்கு 27-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவரை மருத்துவமனையில் சேர்த்து 24 மணி நேர இடைவெளியில் இது ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவைக்கு பயன்படுத்த

ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் சிறந்ததாக இருக்காது. சன் ஸ்க்ரீன் வெயிலில் தேங்காய் எண்ணெயால் போதிய பாதுகாப்பை வழங்க முடியாது. ஏனெனில் தேங்காய் எண்ணெயில் SPF 8 தான் உள்ளது.ஆனால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்க குறைந்தது SPF 30 இருக்க வேண்டும். காயங்களில் இதை பயன்படுத்தினால், மிகுந்த எரிச்சலை சந்திக்கக்கூடும். உணவுகளை டீப் ப்ரை செய்வதற்கு சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயே சிறந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago