முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

ராவணனின் சடலம் எங்கிருக்கு தெரியுமா?

நமக்கு ராமாயணத்தை தெரியும். ராமனையும் ராவணனையும் தெரியும். ராமாயணப் போரில் ராவணன் கொல்லப்பட்டதாக நாம் படித்திருக்கிறோம். பின்னர் சீதையை மீட்டுக் கொண்டு ராமன் அயோத்தி திரும்பினான். அதற்கு பின்னர் ராவணனுக்கு என்ன ஆனது, இலங்கையில் என்ன நடந்தது என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அதன் பின்னர் ராவணின் உடல் வீபிஷணனிடம் ஒப்படைக்கப்பட்டது. வீபிஷணன் தான் பட்டமேற்க உள்ளதால், அந்த உடலை ஒரு பேழையில் வைத்து நாக குல வீரர்களிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ராவணன் மயக்கத்தில் இருப்பதாக கருதி உடலை பல்வேறு மூலிகை தைலங்களால் பதப்படுத்தி ரக்லா என்னும் காட்டுப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயர குகையில் பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த குகையிலிருந்து அரச ஆடை ஆபரணங்களோடு கூடிய ராவணனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படமும் வெளியாகியுள்ளது. அப்பகுதி தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ராமாயணப் போரின் போது 9300 ஆண்டுகளுக்கு முன்பு கிமு 7292 நவம்பர் 15 இல் ராவணன் கொல்லப்பட்டதாகவும் இதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹேர்கட்டில் அசத்தலான உருவங்கள் பஞ்சாப் சகோதர்கள் அசத்தல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே போல கலைக் கண்ணோடு பார்த்தால் எந்த பொருளையும் தங்களுடைய படைப்பாற்றலால் மேஜிக் போல மாற்றி விடும் வித்தை படைத்தவர்கள் படைப்பாளிகள். அப்படித்தான் பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் கலைஞர்கள் தனது அசத்தலான முடி வெட்டுதல் மூலம் சிறப்பான உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களின் தலையே கேன்வாசாக, தலையில் மைக்கேல் ஜாக்சன், மிக்கி மவுஸ் என விதவிதமான உருவங்கள் ஜொலிக்கின்றன. பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் தொழில் செய்து வரும் சகோதரர்களான Dabwali என்ற பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh Sidhu மற்றும் Gurwinder Singh Sidhu ஆகியோர்தான் இந்த சாதனையை படைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ஹேர்கட் மூலம் செய்து தருகிறோம் என்கின்றனர் ஸ்டைலாக அவர்கள் தங்களது கேசத்தை ஒதுக்கியபடி. 

கால்சியம் சத்து

உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை தடுக்க பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து அதை தடுக்கலாம். சோயா பாலில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும்.

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

முகம் பார்க்கும் கண்ணாடி முதன்முதலில் எப்போது தோன்றியது?

1835 இல். ஜெர்மனியைச் சேர்ந்த வேதியிலாளர் ஜஸ்டுஸ் வோன் லைபிக் என்பவர்தான் கண்ணாடியின் பின்புறம் சில ரசாயன கலவையை பூசுவதன் மூலம் அசலான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியவர். இவர்தான் அமோனியாவில் சில்வர் நைட்ரேட்டை கலந்து கண்ணாடியின் பின்புறம் பூசி அதன் எதிரொளிப்பு தன்மையை உலகுக்கு காட்டியவர். அப்போது முதல் நாம் நமது முகங்களை இடைவிடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago