கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தள ங்களுக்கு பிரபலமான உணவு வகை களின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்டணும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாம்.
தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...
காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய அழகிய, அதிசய சுரங்கப் பாதை எங்குள்ளது தெரியுமா...உக்ரைன் நாடு. ரஷ்யாவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு. நாடுதான் குட்டி, ஆனால் ஐரோப்பாவிலேயே அதிகமான அழகிய கட்டிடங்கள், சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டு தளங்கள், பாரம்பரிய சந்தைகள் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான 2 ஆவது மிகப் பெரிய நாடாகும். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் காதலர் பசுமை சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 3 கிமீ நீளம் கொண்ட இந்த பாதை ஒரு கைவிடப்பட்ட ரயில் தடமாகும். ஒரு காலத்தில் அருகில் உள்ள மர ஆலையிலிருந்து தினமும் மரங்களை சுமந்து கொண்டு ரயில் இந்த தடத்தில் சென்று வந்துள்ளது. தற்போது இந்த தண்டவாளத்தை பசுமை போர்த்திய சுரங்கம் போல இயற்கை அற்புதமானதாக மாற்றியுள்ளது. உலகில் உள்ள காதலர்கள் எல்லாம் இதை நோக்கி தினம் தினம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.அத்தனை அற்புதமான இடமாகும். இதில் நடந்து செல்வதே மிகவும் பரவசமளிக்கும் அனுபவமாக அமையும். அந்நாட்டில் உள்ள Kleven நகரில் கார்பெந்தியன் மலைத் தொடர் காடுகளுக்கு மத்தியில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.
உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 481 பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 13-வது இடமும், இவர்கள் ஒரு குழந்தையின் படிப்புக்காக தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை சுமார் ரூ.12 லட்சத்து 35 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


