உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.
மொபைல் போன் வைத்திருப்பவர்களின் கவலை பெரும்பாலும் சட்டென்று கரைந்துவிடக் கூடிய பேட்டரி சார்ஜ்தான். தற்போது வெளியூர் பயணங்களின் போது பலரும் பவர் பேங்க் வைத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் மொபைலை சார்ஜ் செய்வதாக இருந்தாலும், பவர் பேங்கை சார்ஜ் செய்வதாக இருந்தாலும் அதற்கான மின் இணைப்பை தேட வேண்டியது அவசியமாகும். மின் இணைப்பு கிடைக்காத வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால், மொபைல் பேட்டரி சார்ஜ் டவுண் ஆகி விட்டால்.. மிகவும் கஷ்டம்தான். இதனால் நமது மனமும் டவுனாகி விடும். இனி அந்த கஷ்டம் வேண்டாம். மொபலை சார்ஜ் செய்ய தற்போது சோலார் மொபைல் சார்ஜர் வந்து விட்டது. இதற்கு சிறிய அளவு வெளிச்சம் போதும். அதை அப்படியே நமது மொபைலில் இணைத்து விட்டால்... நாள் முழுவதும் பேட்டரி டவுன் ஆகாமல் ஜாலியாக அரட்டை கச்சேரியை தொடரலாம்.. இதன் விலையும் சுமார் ரூ.300 லிருந்து தொடங்கி பல்வேறு ரகங்களில் ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இனி வாங்கி உங்களது நண்பிகள், நண்பர்களை அசத்துங்கள்..
அமெரிக்கோ வெஸ்புகி என்பவர் 1499-ல் அமெரிக்காவை அடைந்தவர். இவர், அமெரிக்கா ஆசியாவை சேர்ந்த பகுதி அல்ல, அது ஒரு தனி கண்டம் என்பதை கண்டறிந்தார். 1507-ல் ஜெர்மனியை சேர்ந்த மார்டின் என்பவர் உலக வரைப்படத்தில் அமெரிக்காவை சேர்த்த போது வெஸ்புகியின் முன் பெயரான அமெரிக்கோ என்பதையே அமெரிக்கா என பெயர் வைத்தார்.
பண்டைய காலத்தை பற்றி தெரிந்து கொள்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை எகிப்து நாட்டின் மம்மிக்கள். தற்போது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்கள் மூலம் பண்டைய எகிப்து மம்மிக்களின் முகங்களை விஞ்ஞானிகள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள மார்க்ஸ் பிளாங் இன்டிடியூட் ஆஃப் சையின்ஸ் ஆஃப் ஹியூமன் ஹிஸ்டரி மையமும் துபின்சென் பல்கலை கழகமும் இணைந்து இப்பணியை மேற்கொண்டுள்ளன. இதற்காக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிக்களின் உடலிலிருந்து டிஎன்ஏ சாம்பிள்கள் தொகுக்கப்பட்டு முக மாதிரிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற முயற்சி இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் பண்டைய எகிப்து நாகரிகத்தின் அசலான முகங்களை நம்மால் இனம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று பொதுவான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பதால் உடல்நலம் மேம்படும். அத்துடன் சமூகத்தில் பலருடன் பழக்கம் ஏற்படும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், நல்ல எண்ணம் மற்றும் செயல்பாடுகளால் உடல் நலம் மேம்படும் என கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சிதம்பரம் அருகே காவலரை தாக்கிய கஞ்சா வியாபாரி சுட்டுப்பிடிப்பு
23 Nov 2025கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார்.
-
உத்தரகாண்டில் 161 ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் பறிமுதல்
23 Nov 2025டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கடலூர் கனமழையால் விபரீதம்: மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
23 Nov 2025கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கனமழையால், மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூரில் கலெக்டர் மரியாதை
23 Nov 2025கோவை : கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்ட துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிக
-
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு : பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
23 Nov 2025ஜெருசலேம் : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் சென்றுள்ள நிலையில் அங்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது
23 Nov 2025பிரேசிலியா : ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக பிரேசில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டார்.
-
137 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் : விவசாயிகள் மகிழ்ச்சி
23 Nov 2025கூடலூர் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து நேற்று காலை 137 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கரூர் விவகாரம் குறித்து விஜய் ஒருபோதும் பேசமாட்டார் : டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்
23 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர்.
-
கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
23 Nov 2025கோவை : கோவையில் ரூ.214 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், டிசம்பர் 1-ம் த
-
பஞ்சாபில் 50 கி. ஹெராயின் பறிமுதல்
23 Nov 2025சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 50 கிலோ ஹெராயினை பஞ்சாப் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைப்பற்றியுள்ளது.
-
30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் உடல் தகனம்
23 Nov 2025சென்னை : 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
ஜி-20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
23 Nov 2025ஜோகன்னஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது.
-
வங்கியில் போலி ஆவணம் மூலம் ரூ.6 கோடி மோசடி : சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
23 Nov 2025சென்னை : பொதுத்துறை வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.6 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.
-
திருச்செந்தூரில் திடீரென பல அடி தூரம் உள்வாங்கிய கடல்
23 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் நேற்று திடீரென பல அடி தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. ஆட்சி அமைந்தால்... விஜய் அளித்த வாக்குறுதிகள்
23 Nov 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பல்
-
மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் இ.பி.எஸ். : நவ.30-ல் கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம்
23 Nov 2025சென்னை : கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-11-2025.
23 Nov 2025 -
ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்: தனது அமைதி திட்டத்தை ஏற்க உக்ரைனுக்கு ட்ரம்ப் மிரட்டல்
23 Nov 2025நியூயார்க் : ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்தை உக்ரைன மேற்கொள்ள தனது அமைதி திட்டத்தை ஏற்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணி
23 Nov 2025சென்னை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சி.பி.எஸ்.
-
ஏன் விஜயை தொட்டோம் என நினைத்து வருந்த போகிறீர்கள் : காஞ்சிபுரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
23 Nov 2025காஞ்சிபுரம் : ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள் என்றும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள்
-
சண்டிகருக்கு தனி கவர்னர்:மத்திய அரசின் திட்டத்துக்கு பஞ்சாப் முதல்வர் எதிர்ப்பு
23 Nov 2025சண்டிகர் : பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது.
-
இன்றைய ராசிபலன்
23 Nov 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Nov 2025- பழனி ஆண்டவர் விழா தொடக்கம்.
- திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதம்.
- திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் விழா தொடக்கம்.
- திருவெண்காடு, திருக்கழுங்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் இ
-
இன்றைய நாள் எப்படி?
23 Nov 2025


