எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு நடத்திய போட்டியில் 171 பேருக்கு பரிசுகள்: கே.சி வீரமணி வழங்கி பாராட்டு
சென்னை, சென்னையில் தமிழக அரசின் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விழாவில் சிறப்பு நூலாசிரியர்கள், பதிப்பகத்தார், மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் என 171 பேருக்கு ரூ 28 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு சார்பாகச் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விழா, சென்னைப் பல்கலைக் கழகக் கூட்ட அரங்கில் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் . கே.சி. வீரமணி பங்கேற்று, திருக்குறள் முற்றோதல் செய்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாணவர்களுக்கு ரூ.10,ஆயிரம் - பரிசுக்கான காசோலைகள் வழங்கியும், பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை,பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கியும், தமிழில் 36 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தார்கள் என மொத்தம் ரூ.28,லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள பணப் பரிசுகளை 171 பேருக்கு வழங்கியும் விழாச் சிறப்புரையாற்றினார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது மக்கள் நலன் கருதி நல்ல பலத் திட்டங்களை நாள்தோறும் அறிவித்தும் செயற்படுத்தியும் வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் சிந்தனைகள், அறநெறிக் கருத்துக்கள், எங்களை வழிநடத்திச் செல்லும் எங்களின் ஆதாரங்களாகும்.
சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்ற அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டார் மக்களின் முதல்வர் அம்மா. அவரது சிறப்புமிக்க சிந்தனையில் சிறந்தோங்கிய இந்த சித்திரைப் புத்தாண்டு விழா பழந்தமிழ்ப்பெருமையை போற்றச் செய்கிறது எனலாம்.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்லது அமைச்சு என்ற வள்ளுவனின் சிந்தனையை தனது மேலோங்கிய செயல்பாட்டால் செயல்படுத்தி வருகிறார் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா .
பேரறிஞர் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்கள். உலகத் தமிழறிஞர்கள் போற்றுகின்ற அளவில் எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தி இயல், இசை, நாடகம் என்று முத்தமிழோடு அறிவியல் தமிழையும் கொண்டு வந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்ததோடு தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் புத்துயிர் ஊட்டி பெருமை சேர்த்தவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா.
உலகத்தின் எந்த மூலையிலும் தமிழர்கள் இன்னல்பட்டாலும் முதல் குரல் கொடுத்தவர், கொடுப்பவர் எங்களின் மக்கள் முதல்வர் ஜெயலலிதா, .அன்றைய ஆட்சியாளர்கள் தமிழைச் செம்மொழி என்ற பெயரிட்டு ஒட்டு மொத்தமாக குடும்பத்தோடு கோவையிலே கும்மாளம் அடித்ததை எக்காலமும் தமிழறிஞர்கள் மறக்க மாட்டார்கள். தமிழகத்தின் வாழ்வாதாரத்தை விட்டுக் கொடுத்தவர் அன்றைய முதலமைச்சர். அதைப் பெற்றுத் தந்தவர் மக்களின் முதல்வர் ஜெயலலிதா . அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழ் ஓங்கி வளர்ந்திட நாம் அனைவரும் உழைத்திட இந்நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார்.
முன்னதாக, வரவேற்புரையாற்றிய தமிழ் வளர்ச்சி- செய்தித்துறைச் செயலாளர் மூ.இராசாராம் பேசுகையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் சித்திரையில் கொண்டாடப்படுவது திராவிடப் பண்பாடு ஆகும். அதனால்தான், தமிழர்கள் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட, சில தினங்கள் முன்போ பின்போ ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தவர் """"யுகாதி"" என்றும் """"விஷு"" என்றும் புத்தாண்டைக் கொண்டாடி வரவேற்கிறார்கள். இதைப் போலவே, பிகார், ஜார்க்கண்ட், காஷ்மீர், மகாராஷ்டிரம், கோவா, வங்காளம், அசாம், பஞ்சாப், ஹரியானா, மணிப்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சித்திரை மாதத்தை ஒட்டியே புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுவதும் இந்தப் பருவத்தில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவது, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே அடையாளமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உத்தம சோழரின் செப்பேடுகளும், முதலாம் குலோத்துங்கரின் கல்வெட்டுகளும் சோழநாட்டின் கோயில்களில் சித்திரைத் திருவிழா எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை அறியத் துணைபுரிகின்றன. அந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழாவிற்காகச் சிறப்புக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.தமிழ்மொழி கிரேக்கத்தைவிடப் பண்பட்டது. இலத்தீனைவிட அழகானது. ஆங்கிலத்தைவிட ஆற்றல் வாய்ந்தது. இத்தாலிய மொழியைவிட இனிமையானது. எபிரேயத்தைவிடப் பழமையானது என்றெல்லாம் பிற நாட்டு மொழி வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
விழாவில், முன்னாள் அரசவைக் கவிஞர் . முத்துலிங்கம் தலைமையில் ‘தாயே தமிழே’ எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கில் கவிஞர் சினேகன், கவிஞர் கவிதாசன், கவிஞர் தங்க காமராசு, கவிஞர் பா.கிருஷ்ணன், கவிஞர் மலர்விழி, கவிஞர் சி. ரேகா மற்றும் செல்வன் கோ. மணிகண்டன் ஆகியோர் கவிதை பாடினார்கள்.
அதனைத் தொடர்ந்து கலைமாமணி கு. ஞானசம்பந்தன் தலைமையில் நாடு போற்றும் நான்காண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா? தமிழக வளர்ச்சியா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இப்பட்டிமன்றத்தில் தமிழ் வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் தங்க மூர்த்தி, பேராசிரியர் அர்ச்சனா கார்த்திகேயன், கவிஞர் மலர்விழி ஆகியோரும் தமிழக வளர்ச்சியே என்ற தலைப்பில் கவிஞர் கோவேந்தன், பேராசிரியர் விசயசுந்தரி, பேராசிரியர் விமலா அண்ணாதுரை ஆகியோரும் பேசினார்கள்.விழாவின் நிறைவாக, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு. சேகர் நன்றி கூற நாட்டுப்பண்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.