முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதல்: அருண்விஜய் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடிகர் அருண்விஜய் போதையில் கார் ஓட்டி போலீஸ் வாகனம் மீது மோதினார். இதுபற்றிய விவரம் வருமாறு:

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஓட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் விஜயகுமாரின் மகனான, நடிகர் அருண் விஜய்யும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் தனது ‘ஆடி’ காரில் வீட்டுக்கு புறப்பட்டார். நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே அவரது கார் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, போலீஸ் டெம்போ டிராவலர் வேன் மீது மோதியது. இதில் வேனின் பின்பகுதி மற்றும் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து நடந்தபோது அருகே யாரும் இல்லாததால் காயம் மற்றும் உயிர்பலி ஏற்படவில்லை. உடனே நுங்கம்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து காரில் இருந்த அருண் விஜயை பிடித்து காவல் நிலையத்துக்குள் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் அதிக மது போதையில் இருந்தது தெரிந்தது.

மேலும், காரை வேகமாக ஓட்டி வந்ததால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், ஆடி காரை பறிமுதல் செய்தனர். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்